வெள்ளி, 29 மே, 2009
மார்க்சியம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் துறையில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டு குறிப்பிட்டத் தக்க மாற்றாங்கள் உருவாகியதால் தொழில் துறையின் புரட்சிக் காலமான அது அமைந்தது. தொழில் துறை பெரும் வளர்ச்சியடைந்தது.தொழில் துறையின் உற்பத்தி சக்திகளாக விளங்கிய தொழிலாளர்கள் எண்ணிக்கைப் பெருகியது. அக்காலத்தில் airooppiya waadukaLin மன்னராட்சி நடைபெற்றதால குடியாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டன.இதனால் நில உடைமை அமைப்பு வலுப் பெற்றிருந்தது. தொழிற்சாலைகளில் உழைப்பதற்குத் தொழிலாளிகளின் கூலி உழைப்புத் தேவைப்பட்டது. பொருள்களை உற்பத்தி செய்வதற்கு கச்சாப் பொருட்கள் தேவைப்பட்டன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனைசெய்து இலாபத்தைப் பெறுவற்கு சந்தைகள் தேவைப் பட்டன. ஆனால் இதற்கு நில உடைமை அமைப்பு தடையாக அமைந்தது. இத்தடையை ஒரு வர்க்கமாக உருவாகிய தொழிலாளிகளும் முன்னேற முன்னேற முதலாளிகளும் உணர்ந்தனர்.வலுப்பெற்றிருந்த நில உடைமை அமைப்பைத் தகர்த்தெறிய வேண்டிய ஒரு புதிய சூழ்நிலை தவிர்க்க முடியாமல் உருவாகியது. இவ்விரண்டு வர்க்கங்களும் மன்னராட்சியோடு முரண்பட்டு மன்னராட்சி முறையை ஒழித்துக் கட்டிவிச்சு மக்களாட்சி முறை நிலைபெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக செயல்பட்டன. தங்களுடைய உழைப்புச் சக்திக்குறிய பலனைப் பெறுவதற்காக உரிமைகளை கோருவத்ற்காக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அமைத்துக் கொண்டனர். மன்னர்களுக்கும் முதலாளி வர்க்கத்தும் இடையில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை ஆதரித்தது.
1789 இல் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சி மன்னராட்சியையும் நில உடைமையையும் எதிர்த்து முதலாளி வர்க்கத்தின் தலைமையில்நடைபெற்ற முதல் புரட்சியாகக் குறிப்பிடப்படுகின்றது. முதலாளி வர்க்கம் தன் சொந்த நலனுக்காகவே உரிமைக்கோரி போராடிப் பெற்றது. அதே போன்று தொழிலாளிகள் தங்களுக்கான உரிமையை கேட்ட போது முதலாளி வர்க்கம் அவற்றை மறுத்தது. இதனால் விழிப்படைந்த தொழிலாளி வர்க்கம் தனக்கென்று தனி தத்துவம், அரசியல் அமைப்புகள் தேவை என்பதை உணர்ந்து அவற்றை உருவாகிக் கொள்ளத் தொடங்கியது. இருந்த போதிலும் தொழிலாளி வர்க்கம் தங்களுக்கென்று சரியான தெளிவான தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. தொழிலாளி வக்கம் அதுவரை சந்தித்து வந்த சிக்கல் களுக்கு விடை காணும் வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த காரல் மார்க்ஸ்(1818 1883), பிரடெரிக் எங்கல்ஸ் (1820 1895) ஆகியோர் தொழிலாளி வர்க்க அரசியலுக்கு அறிவியல் அடிப்படையிலான தத்துவத்தை உருவாக்கி அளித்தனர். இதுவே மார்க்சியம் எனப்பட்டது.
மார்க்ஸ் என்ற மாமேதையின் பெயரால் அழைக்கப்படும் தத்துவம்தான் மார்க்சியம் ஆகும். மனித சமூகம் இதுவரை சேர்த்து வைத்த அறிவு செல்வம் அனைத்தையும் தொகுத்து அவற்றிலிருந்து அறிவியல் பூர்வமாகவும் அறிவுக்கு உகந்ததாகவுமான உள்ள அறிவைச் சாரமாக பிழிந்து மார்க்சால் அளிக்கப்பட்ட தத்துவம் தான் மார்க்சியம் ஆகும்.
செர்மானிய தத்துவ அறிவு, ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம் மற்றும் பிரஞ்சு சோசலிசக் கருத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மார்க்சியம் உருவானது எனப்படுகின்றது.
ஆளுகின்ற வர்க்கத்தின் நலன்களுக்காக மட்டுமே இருந்த தத்துவ கண்ணோட்டத்தை மாற்றி ஆளப்படுகின்ற வர்க்கத்திற்காக உருவாகக்கப் பட்டத்தத்துவம் தான் மார்க்சியம் ஆகும். அதாவது மார்க்சியம் என்ற தத்துவம் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்காகவும் விடுதலைக்காகவும் உருவாக்கப்பட்டது.
முந்தைய தத்துவங்கள் அனைத்தும் உலகத்தை விமரிசிக்க மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே உலகத்தை விமரிசிக்கச் செய்வதோடு மாற்றவும் செய்கின்றது என மார்க்ஸ் கூறினார்.
தத்துவம், அரசியல், பொருளியல், மதம், அறிவியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விளக்குவதாக மட்டுமின்றி அத்துறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதாகவும் ஆன தத்துவம் தான் மார்க்சியம் ஆகும்.
இனி, மார்க்சியத்தின் மூன்று அடிப்படைகளைப் பார்ப்போம்.
1. இயங்கியல் பொருள்முதல்வாதம்
2.அரசியல் பொருளாதாரம்
3. விஞ்ஞான சோசலிசம்
முதலாவதாக இயங்கியல் பொருள்முதல்வாதம் என்பதைப் பற்றி விவரிப்போம்.
இயங்கியல் பொருள்முதல்வாதம் தான் மார்க்சியத்தின் சாரம் எனப்படுகின்றது. இயங்கியல் பொருள்முதல்வாதத் தத்துவத்திற்கு விளைநிலமாக அமைந்தது செர்மானி தத்துவக் களஞ்சியம் தான் எனலாம்.
செர்மானிய தத்துவ அறிவை முழுமையாக வளர்த்தெடுத்த பெருமை ஹெகல் என்ற தத்துவ அறிஞரையேச் சாரும். அவர் முழுமையான இயங்கியலை வளர்த்தெடுத்தார். ஆனால் அது கருத்துமுதல்வாதம் என்ற பிற்போக்குத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இன்னெருபுறம் பாயர்பாக் என்ற தத்துவ அறிஞர் பொருள்முதல்வாதத்தை உயர்த்திப்பிடித்தார்.அதுவும் குறைபாடுடையதாக இருந்தது. இது அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கவில்லை.
ஆகவே ஹெகலின் இயங்கியலையும் பாயர்பாக்கின் பொருள்முதல்வாத தத்துவத்தையும் மார்க்ஸ் அறிவுபூர்வமான முறையில் ஒருங்கிணைத்தார். இதனால் இவ்விரு தத்துவங்களில் இருந்த குறைபாடுகள் நீங்கி அறிவியல் பூர்வமான சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவம் உருவானது.
அடுத்ததாக அரசியல் பொருளாதாரம் பற்றிக் காண்போம்.
இது மனித சமூகத்தின் உற்பத்தி மற்றும் வினியோகம் ஆகியவற்றைப் பற்றி ஆய்கின்றது. பிரிட்டானிய அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியடைந்த கூறுகளை உள்வாங்கிக் கொண்ட மார்க்ஸ் தனது தத்துவத்திற்கு அடிப்படையாகக் கொண்டார். இதை தனது மூலதனம் என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.
இப்போது விஞ்ஞான சோசலிசம் பற்றி பேசுவோம். பிரஞ்சு புரட்சியின் தத்துவம் மற்றும் நடைமுறையிலிருந்து விஞ்ஞான சோசலிசம் உருவானது. விஞ்ஞான சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கப்போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சி ஆகியவற்றைப் பற்றிய தத்துவக் கோட்பாடாகும்.
இயங்கியல் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
'Dialectic" என்னும் ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானதாகும்.
பண்டைக்காலத்தில் இந்தச் சொல், விவாதம் அல்லது தர்க்கம் என்றளவில் மட்டும் பொருள் கொண்டு வழங்கப்பட்டது. ஹெகலின் காலத்தில் தான் அது பன்முகப் பரிணாமத்தில் வளர்ந்து, முழுமையான அர்த்தத்தை பெற்றிருந்தது.
ஹெகலின் தத்துவம் இயக்கவியல் என்றழைக்கப்படுகின்றது.
"எல்லாமே மாறுபடுகின்றன. மாறாதது எதுவும் இல்லை. மாறுவதே மாறாதது. இந்த மாற்றம் சில விதிகளுக்கு உட்பட்டே நடக்கிறது. எதிர்மறைகள் ஒன்றுபடுகின்றன. அதே நேரத்தில் ஒன்றைபின்று எதிர்த்துப் போராடுகின்றன. இது போன்ற சில விதிகளின் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படுகின்றது" என்று ஹெகல் கூறுவார்.
மார்க்ஸுடன் நெருங்கிய தோழனாக விளங்கி, மார்க்சியத் தத்துவத்திற்கு தனக்கே உரிய முறையில் தலைசிறந்த பங்களிப்பைச் செலுத்தியவர் ஏங்கல்ஸ் ஆவார்.
மார்க்சிய இயங்கியல்
மார்க்சிய இயங்கியல் பற்றி ஏங்கல்ஸ் கூறுவதாவது;
"பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன. இந்தப் பிரபஞ்சத் தொடர்பு சம்பந்தப்பட்ட விஞ்ஞானமே இயக்கவியல்... மேலும் மனித சிந்தனை, மனித் சிந்தனைக்கு வெளியே உள்ள புற உலகம் ஆகியவற்றின் இயக்கம் பற்றிய பொதுவான விதிகளைக் கொண்ட விஞ்ஞானமே இயக்கவியல்"
கீழ்கண்ட விதிகள் மார்க்சிய இயங்கியலின் விதிகளில் மிக முக்கியமானவை ஆகும்.
அவையாவன:
1) தனித்து இருப்பது என்று எதுவும் இல்லை. அனைத்தும் சார்பு தன்மை உள்ளவையே. இறுதியானது என்று எதுவுமில்லை. மாறாதது எதுவுமில்லை.
2. எதிர்மறைகள் ஒன்றுபடுகின்றன. போராடுகின்றன. தீவிர நிலைகளில் ஒன்று ம்ற்றொன்றாக மாறுகின்றது.
3.அளவு மாற்றம் பண்பில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பண்பு மாற்றம் அளவு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
4. ஒரு நிலையை மறுத்து எதிரான மற்றொரு நிலை எழுகின்றது. குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டு நிலைகளும் ஒன்றிக் கலந்து புதிய நிலை ஏற்படுகின்றது.
5. வளர்ச்சி என்பதில் பழைய நிலையின் அம்சமே மீண்டும் திரும்ப வருவது போலத் தோன்றும். ஆனால் அந்த அம்சம் மேம்பட்ட அம்சமாக இருக்கும். அதாவது வளர்ச்சி என்பது ஒரு வட்டம் போல புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் திரும்புவதில்லை. திருகு சுற்றுப் போல மேலேமேலே ஏறிச் சுழன்று செல்லும்.
மனதில் உள்ள கருத்துதான் அனைத்துப் பொருட்களையும் படைத்தது அல்லது கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்பது தவறான கருத்து. பொருள் என்பது படைக்கப்படவே இல்லை. அது எப்போதும் இருந்து வருகின்றது. எனவே பொருளைக் கருத்தும் படைக்கவில்லை, கடவுளும் படைக்கவில்லை. கடவுள் இல்லை.
கருத்தைப் படைப்பதே மூளை என்ற பொருள்தான். கடவுள் என்ற கருத்தையும் கற்பனையையும் கூட மனித மூளைதான் படைத்தது.
என்வே முதன்மையானது பொருளா அல்லது கருத்தா என்றால் பொருள்தான் முதன்மையானது. கருத்து இரண்டாம் பட்சமானது.
சமூகம் உட்பட எல்லாமே இயங்குகின்றன. மாறுகின்றன. மாறாதது எதுவுமில்லை. மாறுவதே மாறாதது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சில விதிகளின்படியே மாறுகின்றன.
இவ்வாறு பொருளே முதன்மையானது. அனைத்துமே இயங்குகின்றன. மாறுகின்றன என்று பகரும் தத்துவமே இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற மார்க்சியமாகும்.
வரலாற்றுப் பொருள்முதல் வாதம்
முந்தைய வரலாறுகள் அனைத்தும் மன்னர்களின் வரலாறாகவே எழுதப்படுகின்றன. அதாவது நல்ல மன்னரின் சிந்தனையாலும் செயலாலும் நல்ல ஆட்சியும் கெட்ட மன்னரின் சிந்தனையாலும் செயலாலும் கெட்ட ஆட்சியும் ஏற்பட்டதாக சித்தரிக்கப்பட்டன.
வரலாற்றில் மக்களின் பங்கு பற்றி அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
சமூக மாற்றத்திற்கு உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் பங்கு பற்றி உணர்வும் ஆய்வும் இல்லை.
இதுவரை உள்ள சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்றனர் மார்க்சும் ஏங்கல்சும்.
புராதன பொது உடைமை சமுதாயத்தில் வர்க்கங்கள் இல்லை
அடிமை சமுதாயத்தில்.. ஆண்டான்*அடிமை
நிலபிரபுத்துவ சமுதாயத்தில்.....நிலபிரபு*பண்ணை அடிமை
முதலாளி சமுதாயத்தில்....முதலாளி*தொழிலாளி
சோசலிச சமுதாயத்தில் அரசு*மக்கள்
கம்யூனிச சமுதாயத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டிருக்கும்.
அந்தந்த சமுதாய கட்டமைப்புக்கு தக்கவாறு எதிர் எதிர் வர்க்கங்கள் உருவாகின்றன. இந்த இருவர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமே வர்க்கப் போராட்டம் எனப்படுகின்றது.
மார்க்சிய பொருளாதாரம்
மார்க்சுக்கு முந்தைய பொருளாதார வல்லுனர்கள் பொருளாதாரத்தை வெறும் பொருட்கள் சம்பந்தப்பட்ட விசயமாக மட்டுமே எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தார்கள்.
ஆனால் "மார்க்ஸ் மட்டுமே முதன்முதலாக பொருளாதாரம் என்பது பொருட்கள் சம்பந்தப் பட்டது அல்ல. மாறாக மனிதர்களுக்கிடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது. இன்னும் அடிப்படையாகச் சொன்னால் வர்க்கங்களுக்கு இடையிலான உறவுகள் சம்பந்தப்பட்டது. எனினும் இந்த உறவுகள் எப்போதும் பொருட்களோடு இணைக்கப் பட்டுள்ளன, பொருட்களாகவே தோற்றம் பெறுகின்றான என்று வரையறுதார். அவரது இந்த வரையறையை இப்போது முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்களுன் ஒப்புக் கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்" என ஏங்கல்ஸ் விளக்கினார்.
இனி, மார்க்சிய பொருளாதாரத்தின் மிக முக்கிய விதிகளைக் காண்போம்.
உற்பத்தி சமூகமயமாகிவிட்டது. ஆனால் இதன் பலன் மட்டும் சில முதலாளிகளுக்குச் சொந்தமாகிவிடுகின்றது. இதுதான் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து முரண்பாடுகளுக்கும், சமூகப் பகைமைகளுக்கும் அடிப்படைக் காரணமான கருவாக உள்ளது.
தொழிலாளர்களின் உழைப்பின் ஒரு பகுதிக்கு மட்டும் கூலியைக் கொடுத்து மறுபகுதியைச் சுரண்டுவத்ற்கு முதலாளிகள் பயன்படுத்தும் இயந்திரம், கச்சாப் பொருள், நிலம் போன்ற உற்பத்திச் சாதனங்களும், உணவு, உடை, இருப்பிடம் போன்ற பிழைப்புச் சாதனங்களும் மூலதனம் ஆகும் என மார்க்ஸ் தெரிவித்தார்.
சரக்கில் அடங்கியுள்ள மனித உழைப்பே அந்தச் சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறது.சரக்கில் அடங்கியுள்ள சமூக ரீதியில் அவசியமான மனித உழைப்பு நேரமே அந்தச் சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறது.
கூலிக் கொடுக்கப்படுவது உழைப்புச் சக்திக்கு மட்டும் தானே தவிர உழைப்புக்கு அல்ல; இப்படிக் கொடுக்கப்படாமல் அபகருக்கப்படும் கூலிதான் லபம், வட்டி, வாடகை போன்றவற்றை உள்ளடக்கிய 'மிகைமதிப்பு' அல்லது 'உபரிமதிப்பு" ஆகும்.
மார்க்சின் இந்த 'மிகைமதிப்புக் கோட்பாடு'தான் மார்க்சியப் பொருளாதாரத்தின் அடிப்படைக்கல் ஆகும்
விஞ்ஞான சோசலிசம்
சுரண்டல் அற்ற புதிய சமுதாயத்தின் முதல் வடிவமே சோசலிசம் ஆகும்.இச்சமுதாயத்தில் ஒரு வர்க்கம் இன்னெரு வர்க்கம் மனிதன் இன்னெரு மனிதனை சுரண்டுவதற்கான அடிப்படையே இல்லாத சமுதாயமாகும். இங்கு தனிச்சொத்துடைமை ஒழிக்கப்பட்டிருக்கும்.
மக்கள் அனைவருக்கும் பொதுவான அதாவது அரசுக்குச் சொந்தமான சொத்தும், உழைக்கும் மக்களின் கூட்டுச் சொத்தும் சுரண்டலுக்கு இடந்தராத வகையிலான சொத்தும் மட்டுமே நீடிக்கும்.
ஒவ்வொருவருக்கும் தனது சக்திக்கு ஏற்ற அளவுக்கு உழைப்பதையும் தங்களிடைய உழைப்புக்கு ஏற்ற அள்வுக்குப் பலனையும் அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்நிலைமைதான் சோசலிசம் என்றழைக்கப்படுகின்றது.
கம்யூனிசம்
சுரண்டல் அற்ற புதிய சமுதாயத்தின் உயர்ந்த வடிவமே கம்யூனிச சமுதாயமாகும்.
இங்கு அரசு சொத்தும், மக்களின் கூட்டுச் சொத்தும் ஆகிய சொத்துவடிவங்கள் இல்லா தொழிக்கப்பட்டு பொது சொத்துடைமை மட்டுமே நீடிக்கும்.
பழைய சுரண்டல் வர்க்கத்தின் சுவடு கூட இலல்லாததால் அரசு என்ற அடக்குமுறைக் கருவிக்கான தேவை இருக்காது. இது உலர்ந்து உதிர்ந்துவிடும். பணியும் பலனும் மக்களின் இயல்பாகவும் பழக்கமாகவும் இருக்கும்.
ஒவ்வொருவரும் தனது சக்திக்கு ஏற்ப உழைப்பார்கள். தேவைக்கேற்ப பெறுவார்கள்.
மார்க்சிய அரசியல் சிந்தாத்தின் அடிப்படைக் கொள்கைகள்
1. எழுதப் பட்ட சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே.
2. சமூக மாற்றத்திற்கு உந்து சக்தியாக விளங்குவது வர்க்கப் போராட்டமே.
3. அரசு என்னும் கருவி அனைவருக்கும் பொதுவானது அன்று.ஆளும் வர்க்கம், ஆளப்படுகின்ற வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கும் ஒடுக்குவதற்கான ஒடுக்குமுறை கருவியே அரசு என்பது.
4. சுரண்டும் வர்க்கத்தின் க்ருவியான அரசைத் தகர்த்துவிட்டு அந்தச் சுரண்டும் வர்க்கத்தை ஒடுக்குவதற்கு தங்களின் சொந்த அரசை புரட்சியின் மூலம் உழைக்கும் வர்க்கம் உருவாக்க வேண்டும்.
5. உழைக்கும் மக்களின் சனநாயகத்துக்கும் சோசலிச பொருளாதாரத்திற்கும் உத்திரவாதம் அளிப்பது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்தான்.
6. இதற்காக உழைக்கும் வர்க்கத்துக்குப் பயிற்சி அளிக்கவும் தலைமை தாங்கி வழி நடத்திச் செயல்படவும் பொது உடைமை கட்சி அவசியம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக