ஹெகலைப் பற்றிய ஆழமான ஓர் ஆய்வு நூலாகும். ஹெகலின் முழுத் தத்துவத்தை பயில்வதாக உள்ளது.
இதுமட்டுமின்றி ஹெகல், மார்க்ஸ் ஆகிய இருவருக்கும் உள்ள உறவு குறித்த ஆய்வையும் முன் வைக்கின்றது.
19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் சமூக விமரிசன சிந்தனை எவ்வாறு உருவானது அதன் கூறுகள் என்னென்ன என்பதை கண்டு உரைக்கிறது..
இருதத்லியத்திற்கு எதிராக உணர்ச்சி வாதத்திற்கு எதிராக அறிவு வாதத்தை முன்னிறுத்தியது.
ஐரோப்பாவில் ஏற்கனவே செல்வாக்கு செலுத்தி வந்த நேர்காட்சி வாதத்திற்கு விமரிசனமாக்கவும் அமைந்தது.
ஹெகலின் அறிவு வாதம் விமரிசன அறிவை முன்னிலைப் படுத்துகிறது. எனவே அது சர்வாதிகார அமைப்பு ஒன்றை ஏற்காதது.
ஹெகலின் பரிபூரண ஆன்மா என்ற கருத்தாக்கம் தான் பாசிசத்தின் சர்வ்சாதிகாரத்திற்கு முன்னோடி என்ற குற்றச்சாட்டை மார்க்யூஸ் மறுக்கிறார்.
ஹெகலின் அறிவுவாதம் சமூக விமரிசன அறிவை முன்னிலைப் படுத்துகின்றது.
ஹெகலின் விமரிசன அறிவு சமூக யதார்த்தத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது.
அறிவுக்கு ஒவ்வாத யதார்த்தத்தை அறிவுக்கு முரணான யதார்த்தத்தை விமரிசன அறிவு மாற்றியமைக்கிறது.
ஹெகலின் கருத்து முதல்வாத தத்துவத்தில் இந்த அறிவு சுயாதீனமானது.
இயற்கையையும் காரணகரிய உலகையும் மீறியது அது.
அவற்றிலிருந்து அறிவு சுதந்திரமானது.
ஐரோப்பிய விமரிசன அறிவு என்ற கருத்தாக்கம் 20 ஆம் நூற்றாண்டின் பிரபலமான நேர்காட்சி வாதத்திற்கு எதிரானது.
இருப்புக்கும் சாத்தியப்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை இடைவெளியை அறிவு உணர்த்துகின்றது.
அறிவு இருப்பினுள் தலையிடுகின்றது. இருப்பை நகர வைக்கிறது..
நேர்காட்சி தத்துவம் பிரஞ்சு ஜெர்மனிய விமரிசன மரபுகளுக்கு எதிரானது.
நேர்காட்சி தத்துவம் சமூகவியலையும் மனுடவியலையும் இயற்கை விஞ்ஞானமாக்கு கின்றது.
விமரிசன அறிவு, சுதந்திரம் சமூகநீதி அறவியல் நியாயம் என்பது போன்ற அளவு கோள்களைத் தந்து சமூகத்தை மாற்ற சொல்கின்றது.
இது போன்ற கருத்தாக்கங்களை அனுபூதத் தன்மை கொண்டவை எனகூறி நேர்காட்சிவாதம் மறுக்கும்.
மார்க்சியம் மட்டுமே ஹெகலியத்தின் சொந்த தொடர்ச்சி என மார்க்யூஸ் எழுதினார்.
ஹெகலைத் தாண்டி மார்ச்சியத்திற்கு வரும்போது சில அடிப்படையான மாற்றங்கள் நிகழுகின்றன.
தத்துவத்திலிருந்து சமூக கொள்கைக்கு மாறி வருகின்றோம்.
மார்க்சின் எல்லாத் தத்துவங்களுமே சமூக பொருளாதார தத்துவங்களாக உள்ளன.
ஹெகலியத்தின் சமூக பொருளாதார கருத்துகளும் கூட தத்துவ கருத்துகள்ளுக்கான அடிப்படை உள்ளன.
மார்க்சியத்தில் பூடகத் தத்துவத்தை மறுக்கும் பண்பு உள்ளது. அது சமூக நடைமுறையின் கருவியாக ஆக்கப் படுகின்றது.
தத்துவத்தில் சமூக விமரிசனம் செய்வதை கடந்து தீவிர செயல்களால் சமூக விமரிசனம் செய்யப்படுகின்றது.
நேர்காட்சி வாதம்
இது இருப்பிலுள்ள உலகிலிருந்து தொடங்குகிறது. பொருட்களும் சம்பவங்களும் வாக்கியங்களில் அப்படியே பதிவு செய்ய வேண்டும். என்று கூறுகின்றது.
அந்த வாக்கியங்களிலிருந்து மேலும் மேலும் சிக்கலான சித்தரிப்புகள் நோக்கி கறாராக நகர வேண்டும். அவையும் கூட நேர்காட்சி தகவல்களால சரிபார்க்கத் தக்கவையாக இருக்க வேண்டும். இதுவே விஞ்ஞானத்தின் சரியான பாதை என நேர்காட்சிவாதம் கூற்கின்றது..
மனிதனை வழக்கிலுள்ள உலகின் பொருட்களுக்கு நிகழ்வுகளுக்கும் தகவல்களுக்கும் ஆட்படுத்துகின்றது நேர்காட்சிவாதம்.
இங்கு விமரிசனத்திற்கு இடமில்லை. தகவல்கள் விமரிசனமின்றி ஏற்கப்படுகின்றன. அவை மறுக்கப்படுவதில்லை. உருமாற்றப் படுவதில்லை. இயக்கத்திற்கு இடமில்லை.
இருப்பிலிள்ள உலகமும் பொருளும் எப்படி அப்படி எல்லாம் மாறமுடியும்; மாற்றப்பட முடியும் என்பதற்கான சாத்தியபாடுகளும் இங்கு இடமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக