வியாழன், 21 மே, 2009

பொதுமைக் கோட்பாடு:‍



தனித்தனிப் பொருட்களைக் கொண்ட ஓர் இனம் பற்றிய பொதுக் கருத்து பொதுமை என்றழைக்கப்பட்டது. உதாரணத்திற்காக மனிதன், வெண்மை போன்றவை ஆகும். தனித்தனி நபர்களின் பொதுமை மனிதன் என்பதாகும். வெண்மை நிறம் வாய்ந்த பொருட்களின் பொதுமை வெண்மை ஆகும். இவ்வாறு ஒரு பொதுமைக்குள் பல தனிமங்கள் இருக்கின்றன என்பது இதன் மறுதலையாகும்.

தனித்தனிப் பொருட்கள், தனித்தனி மனிதர்கள் இருக்கின்றனர். ஆனால் பொதுமை என்று ஏதேனும் ஒரு பொருள் இருக்கின்றதா? பொதுமை என்பது உலகின் ஏதேனும் ஒரு பொருளைக் குறிக்கின்றனவா? அல்லது மனதில் உருவாகும் ஒருவகைக் கருத்தா? தனித்தனிப் பொருட்களில் இருக்கின்றனவா? அல்லது அத்தனித்தனிப் பொருட்களுக்கு அப்பால் இருக்கின்றனவா? என்ற கேள்விகள் எழுப்பப் பட்டன. இதனால் பல்வேறு அணுகுமுறைகளில் சிந்திக்கப் பட்ட்ன.

இந்த பொதுமை என்பதை சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ ஆகியோர் ஏற்றுக் கொண்டு தமது அணுகுமுறை/தத்துவம் படைத்தனர். உரிமை, நீதி, உண்மை எனபன பற்றிய பொதுக் கருத்து இல்லை என்றால் அறிவுத் தொடர்ச்சியும் சமுதாய ஒழுங்கும் அற்றுப் போய்விடும் என்றார் சாக்ரடீஸ்.பொதுமை என்பது அழிவில்லாலது. தனித்தனிப் பொருட்கள் அழியும் தன்மையுடையன. பொதுமை என்று ஒன்றிலிருந்து தனித்தனிப் பொருட்கள் வளர்ந்துக் கொண்டு உள்ளது. இதனால் உலகம் அழிவிலிருந்து காக்கப் படுகின்றது என்பவை பிளாட்டோவின் தத்துவாகும்.

ஆனால் பொதுமையை ஒப்புக்கொள்ளாத அரிஸ்டாடில் தனித்தனிப் பொருட்களே உண்மை என்றார்.தனித்தனிப் பொருட்களுக்கு அப்பால் பொதுமை என்று ஒன்றில்லை என்றார்.

பொதுமை என்பது பரு பொருளுக்கு அப்பால் உள்ள நுண்பொருள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக