சனி, 6 ஜூன், 2009

அறிவியல் முறைகள்

பகுப்பளவை முறை

இடைக்கால சிந்தனையாளர்கள் தமது கருத்துலகில் மட்டுமே வாழ்ந்தனர். தம் சிந்தனைக்கேற்ப உலக அனுப‌வங்களை மாற்ற முயற்சி செய்தனர். அனுப‌வத்தின் அடிப்படையை ஆராயவோ அனுப‌வத்தின் அடிப்படையில் ஆராயவோ இல்லை.
இடைக்கால சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை கையாண்டு வந்தனர். இதற்கு வித்திட்டவர் அரிஸ்டாடில் ஆவர்.
பிந்தைய நூற்றாண்டில் நடந்தேறிய அறிவியல் எழுச்சி சிந்தனையாளர்களை அனுபவ உலகை நோக்கி ஈர்த்தது.உலகியல் அனுபவங்களிலிருந்து உண்மைகள் ஆராயப் பட்டன.
அறிவியல் எழுச்சி சிந்தனைமுறையை மாற்றியது எனலாம். அனுபவ வாதக் கொள்கைகள் உருவாக்கப் பட்டன. இதற்கு வித்திட்டவர் பிரான்சிஸ் பேக்கன் என்பவர் ஆவர். இவரது அளவையியலான ஆன ஆய்வுமுறைகள் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன.
இப்போது தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார். பேக்கன் தொகுப்பளவை muraiயின் தந்தை எனப் போற்றப்பட்டார்.
அப்போதிருந்த முதன்மையான தத்துவ பிரச்சினை என்னவென்றால் உண்மைகள் உறைந்து கிடக்கும் இடம் இயற்கையா அல்லது மனித மனத்திலா என்பதுதான்.
சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக‌ தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.
சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக‌ தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.


நவீன காலத்தில் அறிவியல் அறிவைப் பெறும் முறை பற்றிய முக்கிய கோட்பாடுகள்
1. பிரான்சிஸ் பேக்கன் தொகுத்தறிமுறை ( induction method)
2. தோமஸ் கூனின் கட்டளைப்படிம முறை (Paradigm shift)
3. கார்ல் பொப்பரின் பொய்பித்தல் கோட்பாடு (Falsification )

தொகுப்பளவை முறை

அனுவத்தை அணுகி ஆராய்தல், அனுபவத்திலிருந்து பொதுக்கருத்தை உருவாக்குதல், உருவாக்கிய கருத்தை பரிசோதித்துப் பார்த்தல், ஆகிய பல கூறுகளைக் கொண்டதொகுஇப்பள்வை முறைகளே உண்மையை வெளிக் கொணர வல்லவை என்பார் பேக்கன்.
சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக‌ தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.

கட்டளைப்படிம மாற்றம் (Paradigm shift)

விஞ்ஞான அறிவு படிப்படியாக வளர்ச்சிப் பெறுவதிலல்லை. இங்கே திரட்சிப்பெற்ற அறிவைப் பெறமுடியாது.அறிவியல் ஆய்வில் ஏற்படுகின்ற புரட்சிகரமான புதிய மாற்றமே அறிவியல் துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகின்றது. இந்தக் கொள்கையை கட்டளைப்படிம மாற்றம் என கூன் வரையறுக்கிறார்.
விஞ்ஞானச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பொதுவான நம்பிக்கைகள், விழுமியங்கள் உத்திமுறைகள் ஆகியவற்றின் முழுமையான மொத்த வடிவமே கட்ட்ளைப்படிமம் ஆகும். உதாரணமாக புவி மையப் பிரபஞ்சக் கோட்பாடு என்பது புவியைச் சுற்றி சூரியன் சுற்றி வருகின்றது என்பது டாலமியின் கோட்பாடாகும். ஆனால் இந்த கோட்பாட்டை மறுத்தலித்து கோபர்னிக்கஸ் தனது புதிய கோட்பாட்டை உருவாக்குகிறார். அதாவது சூரியனைச் சுற்றி புவி சுற்றி வருகின்றது என்ற மையப் பிரபஞ்சக் கோட்பாடு உருவானது.

பொய்ப்பித்தல கோட்பாடு (Falsefication)

ஒரு விஞ்ஞானி முதலில் தன் ஆய்விலிருந்து புதிய கண்டுபிடிப்பு எதையும் கண்டுபிடிப்பதற்கு பதிலாக ஏற்கனவே முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கைகளை முறியடித்து பொய்ப்பிக்கவே செய்து வந்திருக்கிறார். நிறுவுதலுக்குப் பதிலாக நிராகத்தல் என்ற கொள்கையை வற்புறுத்தியதால் இக்கொள்கை பொய்ப்பித்தல கோட்பாடு எனப்படுகின்றனது. இதை அறிமுகப்படுத்தியவர் கார்ல பாப்பர் ஆவார்.
பாப்பரின் கொள்கைப்படி விஞ்ஞான விளக்கங்கள், கொள்கைகள் அனைத்தும் த்ற்காலிக ஊகங்களே ஆகும். புதிய முயற்சிகள் போது அறிவியல் உலகில் கண்ட பழையவற்றின் மீதான நம்பிக்கை இழக்க நேரிடுகின்றன. புதிய கண்டபிடுப்புகள் தோன்றும் போது, பழைய தவறுகள் களைந்து அதன் மூலம் விஞ்ஞானம் முன்னேறுகின்றது.
மரபுரீதியான விஞ்ஞான முறையானது கீழ்கண்ட‌ முறைகளைக் கொண்டது. இந்த ஆறு முறைகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து செல்வதாகும்.
1. நோக்கலும் பரிசோதனையும்
2.தொகுத்தறிவதும் பொதுமையாக்கலும்
3.கருதுகோளை வாய்ப்புப்பார்த்தல்
ஆகிய முறைகளைக் கடந்து அதன் அடிப்படையில் விஞ்ஞான அறிவு பெறப்படுகின்றது.
ஆனால் "அறிவியல் முறையானது முதன்முதலில் எப்போதும் ஒரு பிரச்சினையுடனேயே ஆரம்பமாகின்றது.அந்தப் பிரச்சினை வழக்கமாக ஏற்கனவே உள்ள ஒரு கொள்கையை மறுதலிப்பதாகவே இருக்கவேண்டும். அடுத்ததாக பழையக் கொள்கைக்கு பதிலாக புதிதாக முன்மொழியப்பட்ட விஞ்ஞானக் கொள்கை இடம் பெற வேண்டும். அப்புதியக் கொள்கையிலிருந்து பரிசோடிக்கக்கூடிய தரவுகளை உய்த்தறிதல் வேண்டும். அப்புதியக் கொள்கைக்கான‌ தரவுகளை கொண்டு பழையக் கொள்கையை மறுத்தலிக்க வேண்டும். இறுதியாக, பழைய விஞ்ஞானக் கொள்கையை தீர்மானிக்கும் தீர்ப்புச் சோதனை இடம் பெற வேண்டும்" என பாப்பர் தனது அறிவியல் கொள்கையை விளக்குகின்றார்.

எல்லை வகுத்தல் பிரச்சினை( Demarcation problem)

நீண்ட காலமாக, அறிவியல் தத்துவத்தில் உள்ள முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று எல்லை வகுத்தல் பிரச்சினையாகும்(demarcation problem). அறிவியலுக்கும் அறிவியல் அல்லாத துறைகளுக்கும் இடையே உள்ள எல்லை, அறிவியலுக்கும் மிகை அறிவியல் துறைக்கும் இடையே உள்ள எல்லை, அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே உள்ள எல்லை வகுப்பதில் உள்ள பிரச்சினை ஆகிய மூன்றும் இப்பிரச்சனையோடு உறவு கொண்டவையாகும். இன்று வரை தீராத பிரச்சனையாகவே உள்ளது.தொடர்ந்து விவாதத்திற்கு உள்ள பிரச்சினையாகவே உள்ளது.

குவாண்டம் கொள்கை

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொதுவாக இரண்டு நிலைகளில் உள்ளன. 1) பொருள் 2) ஆற்றல் ஆகியனவாகும். பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது. ஒரு பொருளைப் பிளந்து கொண்டே சென்றால் கடைசியில் மிஞ்சக் கூடியது அணு மட்டுமே. அணுவைப் பிளக்க முடியாது என்று முதலில் அறிவியல் கண்டுபிடித்தது.
அணு என்பது சரிதான். ஆனால் அணுவையும் பிளக்க முடியும். அதனுள்ளே உள்ள நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவைதாம் கடைசியான துகள்கள் என்று அந்த விதி மற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டது. நியூட்ரான், ப்ரோட்டான், எலக்ட்ரான் ஆகியவை எல்லாம் சரிதான். ஆனால் அவையும் இறுதியான‌ துகள்கள் அல்ல. அவற்றுக்குள்ளும் நுண் துகள்கள் உள்ளன என்று அந்த விதி மேலும் வளர்க்கப்பட்டு செழுமைப் படுத்தப்பட்டது.
இந்த விதியும் குவாண்டம் கொள்கையால் மேலும் மேம்படுத்தப்பட்டது. அதாவது குவாண்டம் கொள்கையானது ஒளியை, அலைப்பண்புடைய துகள்களாக, பொருளாக விளக்குகின்றது. இந்த விளக்கம் கடந்த அரை நூற்றாண்டுகளாகவே மேக்ஸ் பிளாங், ஐன்ஸ்ரைன் ஆகியோரால்ஆய்வு செய்து முன்மொழியப்பட்டது.

2 கருத்துகள்:

  1. அருமையான பணி தோழர்..வாழ்த்துக்கள்

    தோழமையுடன்
    யுவன் பிரபாகரன்

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல்கள். சிறப்பு 👍

    பதிலளிநீக்கு