சிந்தனையாளர்களும் அறிஞர்களும் மனித குலம் தோன்றிய நாள் முதல் வரலாறு முழுவதும் முழுமையடைந்த பரிபூரண உண்மை பற்றி பேசுகிறார்கள். அறிவின் மூலம் மனித குலம் அடைந்துள்ள முன்னேற்றத்தினால் அறிவு வெற்றி பெற்று விட்டதாகக் கருதுகிறார்கள். ஆனால் இந்த வரலாற்று இயக்கத்தில் தனிமனிதன் எங்கே இருக்கின்றான் என்ற சிந்தனை எழுந்தது.
இருத்தலியம் போன்ற தத்துவங்கள் தோல்வியின் தத்துவங்கள் நெருக்கடியின் தத்துவங்கள் இயலாமையின் தத்துவங்கள் என்று குறிப்பிட்டலும் மனித இருத்தல் என்ற தனிமனித இன்ப துனொப உள்ளுணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து அது பேசியது. தனிமனித இருத்தல் அனுபவத்தை மையப்படுத்திய உணர்ச்சிவாதம் ஆகும். இதைப் புறமெய்மை மறுப்புக் கோட்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்னும் சொல் முதன்முத்லில் ஹெனிமேன் என்பவரால் 1929 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தனிமனித இருப்பைப் பற்றிய இருத்தை ஒரு சிந்தனை முறையாக முதன்மைப்படுத்தி எழுதியவர் சோரன் கிர்கே கார்ட் என்னும் பிரஞ்சு நாட்டு தத்துவவாதி ஆவார். ஆனால் தனது தத்துவத்தை இருத்தலியம் என்று பெயரிடவில்லை. "இருத்தலியம் 20 ஆம் நூற்றாண்டில் தொட்ட அதே பிரச்சினைகளை கிர்கே கார்டும் தொட்டு எழுதினார். இவரது எழுத்துக்கள் ஜெர்மனியில் 19 ஆம் கார்ல் ஜாஸ்பர்ஸ், கிர்கே கர்டின் எழுத்துக்களைப் பிரபலப்படுத்தினார். கால வரிசையில் மிக முந்தைய இருத்தலிய சிந்தனையாளராக கிர்கேகார்ட் கருதப்படுகிறார்" (ஐரோப்பியத் தத்துவங்கள், க.முத்துமோகன்)
இருத்தலியம் என்பது தனிமனிதனின் இருப்பு நிலையையும் அவனுக்கிருக்கும் பிரச்சினைகளையும் முதன்மையாகக் கொண்ட தத்துவம் ஆகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய இருப்பே முதன்மையானது, அடிப்படையானது. தன் இருப்பு நிலையைக் கொண்டே மனிதன் பிறவற்றை யெல்லாம் மதிப்பீடு செய்கின்றான். தனக்குள்ள பிரச்சனைகளை தானே தீர்த்துக் கொள்ளவேண்டும்; மனிதன் தனக்கான வாழ்க்கையை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இத்தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
"இரண்டாம் உலகப்போரின் போது ஐரொப்பிய நாகரிகம், பண்பாடு தனது சாவை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது. ஹோமர் சாக்ரடீஸ், இயேசு, ஷேக்ஸ்பியர், கோத்தே, கான்ட், ஹெகல், மார்க்ஸ் என்று மாபெரும் சிந்தனையாளர்களை உற்பத்தி செய்த ஐரோப்பா ஹிட்லரிடம் தோல்வியடைந்தது. கிரேக்க தத்துவம், கிருத்துவம், இத்தாலிய மனித நேயம் தொழில் யுகம் வாக்களித்த ஜனநாயகம், முன்னோக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு, விஞ்ஞானப்பார்வை, தனிமனித உரிமை ஆகிய அனைத்தும் படுததோல்விய்டைந்தன. லட்சக்கணக்கானோர் இரண்டாம் உலகப்போரில் இமடிந்தார்கள். இவை எல்லாவற்றோடும் கூட மற்றொன்ரையும் குறிப்பிட்டாக வேண்டும்.கோடிக்கால் பூதமென்று மார்க்சால் வருணிக்கப்பட்ட ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தாலும்கூட பாசிசத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1920க்கு பிறகு ஐரோப்ப்பாவில் உருப்படியான தொழிலாளர் வர்க்க எழுச்ச்சி எதுவும் நிகழவில்லை என்கிறார் பெரி ஆண்டர்சன் என்ற மார்க்சியர். இந்தப் பின்புலத்தில்தான் இருத்தலியம் தோன்றியது" (ஐரோப்பியத் தத்துவங்கள், க.முத்துமோகன்)
சார்த்தர் ஒரு இருத்தலிய சிந்தனையாளர் ஆவர். மானுடமே இவரது தத்துவங்களில் மையக்கருத்தாக விளங்குகிறது. கடந்த கால வரலாறும் பண்பாடும் மனிதனை அவனுணர்வில்லாமலே சிறைப்படுத்துகின்றன. தாம் சிறைப் பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட உணராமல் மனிதன் அடிமை பட்டிருக்கின்றான். இவவடிமைத் தளைகளை உடைத்தெறிந்து மனிதன் தானாகத் தனக்காக உரிமையோடு வாழவேண்டும் என்பதே சார்த்தரின் தத்துவம் காட்டும் மானுட வாழ்க்கை நெறி ஆகும்.
ஹெகலின் முழுமைக்கோட்பாட்டை சார்த்தர் மறுக்கின்றார். ஒவ்வொரு மனிதனும் எதனையும் சாராமல் தன்னைத்தானே, தனக்காகவே உருவாக்கிக்கொள்கிறான். மனிதன் தன் உறவு, நாடு, மொழி, இனம் என்பதெல்லாம் அவனை அடிமைப்படுத்தும் சங்கிலிகளே ஆகும் என்றார் சார்த்தர்.
ஒரு மனிதன் என்னவாக இருக்கின்றான், என்னவாக மாறிக்கொண்டிக்கின்றான், எவ்வாறு செயல்பட்டுக்கொண்டிக்கின்றான் என்பன போன்ற எண்ணங்களால் தான் மனிதனின் இருத்தலைச் சிறப்புறச் செய்யமுடியும் என்றார் சார்த்தர்.
எனவே தான் நாடு, மொழி, இனம் வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் போன்ற எவற்றுக்கும் மனிதனைக் கட்டுப்படுத்தும் உரிமையில்லை என்றார் அவர். இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுமில்லா வெறுமையிலிருந்து மனிதன் தன் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் சார்த்தர்.
மனிதன் தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்கான பழக்க வழக்கங்களையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தான் விரும்பும் வண்ணம் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறரால் உருவாக்கப்பட்டுத் திணிக்கப்படும் எதையும் மனிதன் ஏற்கக்கூடாது. அடிமைப்பட்டு தன் இருப்பு நிலையை இழந்து வாழ்வதை விட உரிமையோடு தன் இருப்பு நிலையை உணர்த்தி இறப்பதே மேல் என்கிறார் சார்த்தர்.
தனி மனித சுதந்திரம், பொறுப்பு, தெரிவு இவை குறித்தெல்லாம் விரிவாகப் பேசியவர் சார்த்.இன்னும் சொல்லப்போனால் தெரிவுகள், சுதந்திரம் குறித்து தொடர்ந்து அக்கறைக் காட்டியவர் சார்த்.
பிரெஞ்சு எழுத்தாளரும், தத்துவஞானியுமான சார்த், நவீன இலக்கிய கர்த்தாக்களின் சிந்தனையை மிகவும் பாதித்தவர். இவர் எக்சிஸ்டென்ஷியலிசம் என்னும் தத்துவத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.
இந்தத் தத்துவத்துக்கு மறைமுகமாக வித்திட்டவர் இருவர். கியர்க்ககார்டு (1813-1855) என்னும் டென்மார்க் தத்துவ ஞானி. ‘நான் யார்? எப்படி இவ்வுலகில் வந்தேன்? என்னை ஏன் யாரும் கேட்கவில்லை என்ற கேள்விதான், புதிய சிந்தனையை ஆரம்பித்தது. ‘கடவுள் இறந்துவிட்டார். நானும், நீயும், நாம் எல்லோரும் அவரைக் கொன்றுவிட்டோம்’ என்றார் நீட்ஷே. இவர்கள் இருவருடைய தத்துவங்களும், இருபதாம் நூற்றாண்டின் எக்சிஸ்டென்ஷியலிசக் கருத்துகளைப் பாதித்தன.
மனிதனுக்கு எந்த விதப் பொறுப்பும் கிடையாது, கூடாது என்பதை வலியுறுத்தினார் சார்த்.
இருத்தலியம் பொறுப்புகளையும், அறநெறிகளையும் குறித்துப் பேசும் தத்துவம் என்றழைக்கப்படுகின்றது. இங்கு தனிமனித சுதந்திரம், தனக்கான வாழ்வைத் தேர்ந்தெடுப்பது, தனக்கான இருப்பு, மதிப்பீடுகள் போன்றவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
1.மத சிந்தனைசார் இருத்தலியல்வாதிகள்
2.மானுட நேயமிக்க இருத்தலியல்வாதிகள்
இருத்தலியவாதிகளை மதசிந்தனைசார் இருத்தலியல்வாதிகளும், கடவுள் நம்பிக்கையற்ற, கடவுளின் இருப்பு குறித்து அவநம்பிக்கை கொண்ட, மானுடநேயமிக்க இருத்தலியல்வாதிகளும் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். சார்த் இரண்டாம் பிரிவினைச் சேர்ந்தவர்.
இந்த உலகம், மனிதர்கள் எனது பிரக்ஞை நிலைக்கப்பால் இருத்தல் உடையவர்களல்ல. நானே அவர்களுக்கு இருத்தலை அளிக்கிறேன். எனது பிரக்ஞைகளுக்கு அப்பால் எதுவும் இல்லை. எனது பிரக்ஞையினாலேயே எனது இருத்தலைப் பெறுகின்றேன். ஆகவே இருத்தல் என்பது ஒரு இடையறாத செயல் ஆகும். ஒவ்வொரு மனிதனின் இருத்தலையும் நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன். ஆக, இருப்பியல் வாதத்தின்படி, இருத்தல் என்பது, மனிதனின் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டதாக எதுவும் இருக்க முடியாது. இருத்தல் என்பது அகக்காட்சியே ஆகும்.
மனிதனின் பிரக்ஞையின் சார்பிலேயே இருத்தல் உண்டு என்பதே இருப்பியவாதத்தின் அடிநாதமாக விளங்குகிறது. அவனுடைய இருத்தலின் சிருஷ்டி கர்த்தா அவனே என்பது, இருப்பியல்வாதத்தின் அடிப்படையாகத் தெரிகிறது. நானே எனது இருத்தலின் நாயகன்: நானே எனது வாழ்க்கைக்குப் பொறுப்பானவன். ஆக்வே எனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உண்டு அல்லது அதனைத் தெரிவு செய்துகொள்ளும் உரிமையும், சுதந்திரமும் எனக்கு உண்டு.
இருவகை இருத்தல்
1.மெய்மையான இருத்தல்
2.போலி இருத்தல்
எவன் தன்னைப் பிரக்ஞைபூர்வமாக ஒரு நிலைக்கு ஆக்கிக்கொள்கிறானோ, அவனே ‘மெய்மையான இருத்தல்’ உடையவன் என்றும், மற்றவன் போலி இருத்தல் உடையவன் என்றும் சொல்லப்படுகின்றது. தன் மனதை சாராத வேறொரு காரணியால் ஏற்படும் எந்த மாற்றமும் மெய்மையான இருத்தலைக் குறிக்காது. தன்னுடைய சுயசித்தத்தால், அதன் முனைவால் ஒருவன் தன்னை ஆக்கிக்கொள்ளும் இருத்தலே நம்பகமான இருத்தல். இவ்வித ‘சுயசித்தம்’ இருப்பியவாதத்தில் மிக அழுத்தம் பெறுகிறது.
தன்னைத்தானே ஆக்கிக்கொள்ளும் மனிதனுக்குச் சுயதேர்ந்தெடுப்பு என்பது இன்றியமையாதது ஆகும். இந்தத் தெரிவைச் செய்துகொள்ள மனிதனுக்கு எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை என்பது, இருப்பியல்வாதத்தின் சிக்கலான, அழுத்தம் மிக்க ஒப்புதலாகும். எந்த வழிகாட்டியும் சாத்தியம் இல்லை. ஏனெனில் வழிகாட்டி போன்ற ஒரு புறத்தூண்டுதலினால் ஒருவனது வாழ்க்கை அமையுமெனின் அவனது இருத்தல் மெய்மையான இருத்தல் அல்ல. ஆகவே தனது இருத்தலில், மனிதன் வழிகாட்டியில்லாத, பிறருடைய ஆலோசனை இல்லாத, தர்க்க நியாயம் இல்லாத (irrational) தெரிவுகளையே மேற்கொள்கிறான். யாரேனும் ஒருவன் போதுமான காரணங்களின் அல்லது நியாயங்களின் அடிப்படையில்தான் தனது முடிவுகளை மேற்கொள்கிறான் என்பதுபோல அவருக்குத் தோன்றினாலும், உண்மையில் அவர் கருதும் காரணங்கள், அவர் ஏற்கனவே காரணமில்லாது மேற்கொண்ட முடிவுக்குக் கற்பிக்கும் காரணங்களும் நியாயங்களுமாகவே இருக்கும் என இருப்பியல்வாதிகள் திடமாகக் கூறுகின்றனர்.
பொதுவாக மனிதகுலம் புறவயமான சிந்தனைக்கே பழக்கப்பட்டுள்ளது. பொது இயல்புகளின் அல்லது சாரத்தின் அடிப்படையில், கருத்துருவங்கள் உருவாக்கப்படுகின்றன. கருத்துருவாக்கம் (concept formation) மனித மனதின் சிறப்பான ஆற்றல் என்றும், மனிதனின் மொழியின் அடிப்படை என்றும் கூறப்படுகின்றன. விஞ்ஞானமும் பொது இயல்புகளையும் பொது விதிகளையும் பற்றியதான ஒன்றே ஆகும். தனியான இருத்தல் பற்றி விஞ்ஞானம் ஒன்றும் அறியாதது போல, மனிதமொழியும் சிந்தனைமுறையும் கூட தனி இயல்பை, இருத்தலைப் புரிந்துகொள்ளக்கூடியதாய் இல்லை. அதனால் இருப்பியல்வாதம் ஒரு ‘புதுச் சிந்தனை முறையை வேண்டி நிற்கிறது. காரணகாரிய சிந்தனை முறைக்குப் பதிலாக காரண காரியத் தொடர்பு முறையில் அல்லாத உள்ளுணர்வு சார்ந்த உள்நோக்கிய ஒரு புரிதலைக் காண்கின்றது.
இருப்பியல்வாதிகள் தங்கள் தரிசனங்களைப் புலப்படுத்துவதற்கு இலக்கியவடிவங்களேயே தெரிந்தெடுத்துள்ளனர். கெகாட் தொடக்கம் சாத்ரே, காமுஸ் வரையிலான இருப்பியவாதிகளின் படைப்புகளை உலகம் அறியும், தமிழ் இலக்கியத்திலும் — இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கியத்திலும்கூட, இருப்பியவாதத்தின் புலப்பாடுங்கள் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. அசோகமித்திரன் இருப்பியல்வாதத்தைத் தழுவி நிற்பவர். ‘தண்ணீர்’ நாவலில் அவரவருடைய இருத்தலை அவரவரே ஆக்கிக் கொள்ளமுடியும் என்ற இருப்பியல் உண்மைக்கு அழுத்தம் கொடுக்கின்றார்.
முழுமையான சுதந்திரம் இருத்தலியல் வாதிகளின் முக்கியக் கொள்கை. மனிதன் தனக்கு முன்னால் உள்ள ஒபல வாய்ப்புகளில் தனக்கு விருப்புமானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை உடையவன்.
"நிகழ்காலச் சமுதாய வரலாற்று நடைமுறைகளினால் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடை பகரமுடியாத, அல்லது முதலாளித்துவ சமுதாயத்தில் மக்களுக்கிடையில் மலிந்து கிடக்கும் ஏற்றத்தாழ்வுகள், அச்ச உணர்வு, விரக்தி, நம்பிக்கையின்மை ஆகியவற்றிற்கு விளக்கமுடியாத முற்போக்கு வாதம் எனப்படும் லிபரலிஸத்திற்கு ஏற்பட்ட சரிவுகளின் பிரதிபலிப்பே இந்த எக்ஸிஸ்டென்ஷியலிசம் எனத் தெரிகிறது. சுருக்கமாக ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவத்தின் தேய்வுக் காலத்தில் தோன்றியது இக்கொள்கை" ( இலக்கிய இயக்கங்கள், ந. பிச்சைமுத்து. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக