பொதுவுடைமை இயக்கம் இந்திய துணைக்கண்டத்தில் தனது நீண்ட வரலாற்றைக்கொண்டிடுக்கின்றது. இது இந்திய சமூக பொருளாதார கலாச்சார மற்றும் அரசியல்நிலைமைகளை மற்றியமைப்பதற்கு ரசியா சீனா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் ஒருநீண்ட நெடிய காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.பொது உடைமை தத்துவம் இங்கு அறிமுகமாகி சுமார் ஒரு நூற்றாண்டு காலம்நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த தத்துவம் இந்திய பகுதிகளில்நிலவும் சமூக பொருளாதார அரசியல் தத்துவார்த்த நிலைமைகளின் மீது ஒருஉணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.இதற்கான காரணங்கள் என்ன என்று பார்க்கும்போது இந்திய துணைக்கண்டத்திற்கேஉரித்தான தனிச்சிறப்பான சமூக பொருளாதார வரலாற்று காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன்.
ஆனாலும் இந்தியப் பொது உடைமை இயக்கத்திற்கும் அதன் அரசியல் தத்துவ நிலைபாடுகளுக்கும் இதில் தனிச்சிறப்பான பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதை மட்டும் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.இந்திய பொது உடைமை இயக்க வரலாற்றை நோக்கும் போது சுமார் அரை நூற்றாண்டு காலம் ஒன்றுபட்ட பொதுவுடைமை கட்சியாய் செயல்பட்டு பின்னர் எண்ணற்ற பிளவுகளையும் உடைசல்களையும் சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழுக்களும் பிரிவுகளும் புதிது புதிதாக தோன்றி செயல்பட்டு வந்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான தோழர்களும் இளைஞர்களும் தங்கள் வழ்க்கையையும் இன்னுயிரையும் அற்பணித்து வரலாற்றுப் புகழ்மிக்க பல்வேறு போராட்டங்களையும் இயக்கங்களையும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். கோடிக்கணக்கான மகள் மத்தியில் பொதுவுடைமை பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய பொது உடைமை இயக்கத்தின் இத்துணை பிரச்சார இயக்கங்களும் போராட்டங்களும் நடந்தேறினாலும் மார்க்சிய தத்துவம் இந்திய மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொண்டுள்ளதா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
மார்க்சிய தத்துவம் மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொள்ளும் போது அது அளவிடமுடியாத பௌதீகச் சக்தியாக எழுந்து சமூகத்தை மாற்றியமைப்பார்கள் என மார்க்சு கூறுவதை பலமுறை கேட்டிருக்கின்றோம்.ஆனால் இந்திய மக்களை ஏன் மார்க்சிய தத்துவம் பற்றிக் கொள்ளவில்லை என்பதை ஆய்வது உகந்ததாகும்.
சென்ற நூற்றாண்டில் இதற்கு முன் இந்திய வரலாறு கண்டிராத பல்வேறு வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்தேறின. பிரிட்டிசு ஆதிக்கத்திற்கு எதிராகவும் கடுமையான நிலபிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் போராடினர் என்பது வரலாறு.
தேசம் தழுவிய இந்திய சுதந்திர போராட்ட ம் பல்வேவு போக்குகளையும் தன்மைகளையும் கொண்டிருந்தது. இவ்வனைத்து போக்குகளையும் வழி நடத்டிய தத்துவம் பிற்போக்கு தன்மையையே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்றைய காங்கிரசு இயக்கத்தில் இரண்டு வகையாம முக்கிய போக்குகள் இருந்தன. ஒன்று தீவிரவாதப் போக்கு. மற்றது மிதவாத போக்கு. தீவிரவாத போக்கை பிரதிநிதித்துவ படுத்தியவர்களும் பிற்போக்கு தத்துவத்தையே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
ஆரம்பகால பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய செயல்திட்டமானது காங்கிரசு இயக்கத்திலுள்ள தீவிரவாதப் போக்கு உடையவர்களை கட்சிக்கு வென்றேடுப்பது என்பதாகும். அந்த தீவிர வாதப் போக்கின் மூலம் காங்கிரசு இயக்கத்தையே மாற்றியமைப்பது என்ற செயல்திட்டத்தை பொதுவுடைமை இயக்கம் வைத்திருந்தது. இறுதியில் அது சுதந்திர போராட்டத்திற்கு தலைமை ஏற்பதிலிருந்து விலகிச் சென்று விட்டது.
சுதந்திரமான இயக்கமும் உறுதியான தெளிவான தத்துவ தலைமைப் பண்பும் விஞ்ஞானபூர்வமான திட்டமும் இல்லாத காரணங்களினால் இந்திய பொதுவுடைமை இயக்கம் பின்னுக்கு சென்றது.
இன்னபிற காரணங்களினால் மார்க்சிய தத்துவம் இன்னமும் இந்திய உழைக்கும் மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவு. ஆகவேதான் வெகுமக்கள் போராட்டங்களில் பொதுவுடைமையாளர்கள் ஒரு தீர்மானகரமான பங்களிப்பை வகிக்க வியாலாமல் ஒதுங்கியே இருக்கின்றனர்.
சரி. இந்திய பொதுவுடைமை யாளர்களாவது மார்க்சிய தத்டுவத்தை சிந்தனையில் பற்றிக் கொண்டார்களா என்று ஆய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சிந்தனைக்கும் புற உலகிற்கும் உள்ள உஅவு என்பது தத்துவத்தின் ஒரு அடிப்படைக் கூறு ஆகும். புற உலகத்திலிருந்து தோன்றிய சிந்தனை மீண்டும் புற உலகத்தை சென்றடைகின்றது. புற உலகம் மாற்றம் பெறுகின்றது. அதனால் சிந்தனையும் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. புற உலகிலிருந்து தோற்றம் பெறும் சிந்தனையானது புற உலகையே மாற்றியமைக்க வல்லமையும் பெற்று விடுகின்றாது. இவ்விரண்டிற்கும் உள்ள உறவைத்தான் இயங்கியல் உறவு என்று கூறுகின்றோம்.
வரலாறு ரீதியான இத்தகைய உறவின் மூலம் இரண்டுமே மாற்றமடைந்து வளர்ந்து வருவது குறித்து மார்க்சு விளக்குவார். சிந்தனைக்கும் புற உலகிற்கும் பாலமாக அமைவது மனித நடவடிக்கையாகும். இரண்டின் வளர்ச்சிக்கும் மனித நடவடிக்கை என்பது இன்றியமையாததாகும்.
சிந்தனையின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்ப்பிடுவது வறட்டு பொருள் முதல் வாதத்திற்கு வழிவகுக்கும். அது இயக்க மறுப்பியலுக்கும் இடமளிக்கும். அதேபோல மனித நடவடிக்கையைப் புறக்கணிப்பது குறைபாடுடைய பொருள்முதல்வாதம் ஆகும்.
இந்திய மரபுரீதியான பொருள்முதல்வாதம் இத்தகையதாகத் தான் இருந்தது. இது மனித நடவடிக்கையின் இன்றியமையாப் பாத்திரத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. ஆகவே இந்திய மரபு பொருள் முதல்வாத சிந்தனை புறஉலகை மாற்றியமைக்கவோ தன்னை மாற்றிக் கொள்ள்வோ இல்லை. இந்திய மரபு பொருள்முதல்வாத பாரம்பரியத்தை உரிமை கொண்டாடுபவர்களாகிய இந்திய கம்யூனிஸ்டுகளால் இத்தகைய பலவீனத்தை களைந்தெடுக்க இயலவில்லை.
இது ஒரு புறமிருக்க, பிரிட்டிசு ஏகாதிபத்திய ஆதிக்கத்தினால் தத்துவ தளத்தில் நேர்காட்சிவாத சிந்தனையே மேலோங்கியிருந்தது. இதுவும் ஒருவகையான அனுபவாத பொருள்முதல்வாதம் ஆகும்.
இது இந்திய மரபு பொருள் முதல்வாத சிந்தனையோடு பிரிட்டிசு நேர்கட்ட்சிவாத சிந்தனையுடனான கவையே. பொது உடைமையாளர்களை ஆட்கொண்டது. மேலும் இயக்கவியல் தன்மை முற்றிலும் அற்றுப் போயிருந்தது.
இத்தகைய பின்புலத்தில்தான் இந்தியாவில் மார்க்சியம் அறிமுகம் ஆனது. லெனின் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு மார்க்சிய தத்துவம் பரிச்சயம் ஆனது. அன்றைய இந்திய பொதுவுடைமையாளர்களால் மார்க்சியத்தை முழுமையாக சுதந்திரமான சிந்தனையாக் உள் வாங்கிக் கொண்டு வளர்த்துக் கொள்ளவில்லை.
ஆகவே சர்வதெச பொதுவுடைமை கட்சிகளில் இருந்துவந்த பலவீனமான போக்குகளும் பிற்போக்கான சிந்தனைகளும் இந்திய பொதுவுடைமை இயக்கத்தை எளிதில் ஆட்கொண்டது.
இரசியசார்பு சீனசார்பு என வெளிப்படையாகவே இந்திய பொதுவுடைமையாளர்களின் சிந்தனையில் ஒரு சார்பு தன்மை காணப்பட்டது. இது ஏறத்தாழ அனைத்துக் குழுக்களின் சிந்தனை முறையும் அவ்வாறே இருந்தது.
இரசியாவிலும் சீனாவிலும் பொதுவுடைமை யாளர்களின் தலைமை தர்ந்த பின்னரே மார்க்சியத்தை இந்தியாவின் குறிப்பான நிலைமைகளுக்கு பொருத்துவது குறித்து யோசிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தமக்கே உரிய தத்துவ பலவீனத்தால் இம்முயற்சியும் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறியே.
இந்திய சிந்தனை மரபு என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததும், சிக்கலானதுமாகும். இதில் ஏராளமான தத்துவ போக்குகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.இந்திய மரபு தத்துவங்கள் குறித்து இந்திய பொதுவுடைமை யாளர்களிடையே எப்பொதுமே ஒரு உதாசீனமான போக்கு நிலவி வந்துள்ளது.
இந்திய பொதுவுடைமையாளர்கள் இந்திய சிந்தனைமரபிலுள்ள பொருள்முதல்வாத சிந்தனையையோ அல்லது இயங்கியல் கூறுகளையோ பயில்வதோ அல்லது பயிற்றுவிப்பதோ இல்லை. அவற்றின் பலவீனங்களை களைந்து தனிச்சிறப்புகளைக் கண்டறிந்து அவற்றை உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க என்றுமே விரும்பியதில்லை.
இதன் விளைவாக இவர்கள் இந்திய மரபு தத்துவங்களில் உள்ள பிற்போக்கான தத்துவங்களையே பிரதிநிதித்துவ படுத்துகின்றனர். இந்திய சிந்தனைமரபிலுள்ள பொருள்முதல்வாத பாரம்பரியத்தை உரிமைக் கொண்டாடுபவர்களாக இருந்தாலும் அதன் பலவீனமான அம்சங்களூக்கு ஆட்பட்டுப் போனதில் வியப்பேதுமில்லை.
ஆனாலும் இந்தியப் பொது உடைமை இயக்கத்திற்கும் அதன் அரசியல் தத்துவ நிலைபாடுகளுக்கும் இதில் தனிச்சிறப்பான பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதை மட்டும் இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம்.இந்திய பொது உடைமை இயக்க வரலாற்றை நோக்கும் போது சுமார் அரை நூற்றாண்டு காலம் ஒன்றுபட்ட பொதுவுடைமை கட்சியாய் செயல்பட்டு பின்னர் எண்ணற்ற பிளவுகளையும் உடைசல்களையும் சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழுக்களும் பிரிவுகளும் புதிது புதிதாக தோன்றி செயல்பட்டு வந்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான தோழர்களும் இளைஞர்களும் தங்கள் வழ்க்கையையும் இன்னுயிரையும் அற்பணித்து வரலாற்றுப் புகழ்மிக்க பல்வேறு போராட்டங்களையும் இயக்கங்களையும் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். கோடிக்கணக்கான மகள் மத்தியில் பொதுவுடைமை பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய பொது உடைமை இயக்கத்தின் இத்துணை பிரச்சார இயக்கங்களும் போராட்டங்களும் நடந்தேறினாலும் மார்க்சிய தத்துவம் இந்திய மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொண்டுள்ளதா என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
மார்க்சிய தத்துவம் மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொள்ளும் போது அது அளவிடமுடியாத பௌதீகச் சக்தியாக எழுந்து சமூகத்தை மாற்றியமைப்பார்கள் என மார்க்சு கூறுவதை பலமுறை கேட்டிருக்கின்றோம்.ஆனால் இந்திய மக்களை ஏன் மார்க்சிய தத்துவம் பற்றிக் கொள்ளவில்லை என்பதை ஆய்வது உகந்ததாகும்.
சென்ற நூற்றாண்டில் இதற்கு முன் இந்திய வரலாறு கண்டிராத பல்வேறு வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்தேறின. பிரிட்டிசு ஆதிக்கத்திற்கு எதிராகவும் கடுமையான நிலபிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் போராடினர் என்பது வரலாறு.
தேசம் தழுவிய இந்திய சுதந்திர போராட்ட ம் பல்வேவு போக்குகளையும் தன்மைகளையும் கொண்டிருந்தது. இவ்வனைத்து போக்குகளையும் வழி நடத்டிய தத்துவம் பிற்போக்கு தன்மையையே கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்றைய காங்கிரசு இயக்கத்தில் இரண்டு வகையாம முக்கிய போக்குகள் இருந்தன. ஒன்று தீவிரவாதப் போக்கு. மற்றது மிதவாத போக்கு. தீவிரவாத போக்கை பிரதிநிதித்துவ படுத்தியவர்களும் பிற்போக்கு தத்துவத்தையே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
ஆரம்பகால பொதுவுடைமை இயக்கத்தின் முக்கிய செயல்திட்டமானது காங்கிரசு இயக்கத்திலுள்ள தீவிரவாதப் போக்கு உடையவர்களை கட்சிக்கு வென்றேடுப்பது என்பதாகும். அந்த தீவிர வாதப் போக்கின் மூலம் காங்கிரசு இயக்கத்தையே மாற்றியமைப்பது என்ற செயல்திட்டத்தை பொதுவுடைமை இயக்கம் வைத்திருந்தது. இறுதியில் அது சுதந்திர போராட்டத்திற்கு தலைமை ஏற்பதிலிருந்து விலகிச் சென்று விட்டது.
சுதந்திரமான இயக்கமும் உறுதியான தெளிவான தத்துவ தலைமைப் பண்பும் விஞ்ஞானபூர்வமான திட்டமும் இல்லாத காரணங்களினால் இந்திய பொதுவுடைமை இயக்கம் பின்னுக்கு சென்றது.
இன்னபிற காரணங்களினால் மார்க்சிய தத்துவம் இன்னமும் இந்திய உழைக்கும் மக்களின் சிந்தனையைப் பற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவு. ஆகவேதான் வெகுமக்கள் போராட்டங்களில் பொதுவுடைமையாளர்கள் ஒரு தீர்மானகரமான பங்களிப்பை வகிக்க வியாலாமல் ஒதுங்கியே இருக்கின்றனர்.
சரி. இந்திய பொதுவுடைமை யாளர்களாவது மார்க்சிய தத்டுவத்தை சிந்தனையில் பற்றிக் கொண்டார்களா என்று ஆய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சிந்தனைக்கும் புற உலகிற்கும் உள்ள உஅவு என்பது தத்துவத்தின் ஒரு அடிப்படைக் கூறு ஆகும். புற உலகத்திலிருந்து தோன்றிய சிந்தனை மீண்டும் புற உலகத்தை சென்றடைகின்றது. புற உலகம் மாற்றம் பெறுகின்றது. அதனால் சிந்தனையும் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. புற உலகிலிருந்து தோற்றம் பெறும் சிந்தனையானது புற உலகையே மாற்றியமைக்க வல்லமையும் பெற்று விடுகின்றாது. இவ்விரண்டிற்கும் உள்ள உறவைத்தான் இயங்கியல் உறவு என்று கூறுகின்றோம்.
வரலாறு ரீதியான இத்தகைய உறவின் மூலம் இரண்டுமே மாற்றமடைந்து வளர்ந்து வருவது குறித்து மார்க்சு விளக்குவார். சிந்தனைக்கும் புற உலகிற்கும் பாலமாக அமைவது மனித நடவடிக்கையாகும். இரண்டின் வளர்ச்சிக்கும் மனித நடவடிக்கை என்பது இன்றியமையாததாகும்.
சிந்தனையின் பாத்திரத்தைக் குறைத்து மதிப்ப்பிடுவது வறட்டு பொருள் முதல் வாதத்திற்கு வழிவகுக்கும். அது இயக்க மறுப்பியலுக்கும் இடமளிக்கும். அதேபோல மனித நடவடிக்கையைப் புறக்கணிப்பது குறைபாடுடைய பொருள்முதல்வாதம் ஆகும்.
இந்திய மரபுரீதியான பொருள்முதல்வாதம் இத்தகையதாகத் தான் இருந்தது. இது மனித நடவடிக்கையின் இன்றியமையாப் பாத்திரத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. ஆகவே இந்திய மரபு பொருள் முதல்வாத சிந்தனை புறஉலகை மாற்றியமைக்கவோ தன்னை மாற்றிக் கொள்ள்வோ இல்லை. இந்திய மரபு பொருள்முதல்வாத பாரம்பரியத்தை உரிமை கொண்டாடுபவர்களாகிய இந்திய கம்யூனிஸ்டுகளால் இத்தகைய பலவீனத்தை களைந்தெடுக்க இயலவில்லை.
இது ஒரு புறமிருக்க, பிரிட்டிசு ஏகாதிபத்திய ஆதிக்கத்தினால் தத்துவ தளத்தில் நேர்காட்சிவாத சிந்தனையே மேலோங்கியிருந்தது. இதுவும் ஒருவகையான அனுபவாத பொருள்முதல்வாதம் ஆகும்.
இது இந்திய மரபு பொருள் முதல்வாத சிந்தனையோடு பிரிட்டிசு நேர்கட்ட்சிவாத சிந்தனையுடனான கவையே. பொது உடைமையாளர்களை ஆட்கொண்டது. மேலும் இயக்கவியல் தன்மை முற்றிலும் அற்றுப் போயிருந்தது.
இத்தகைய பின்புலத்தில்தான் இந்தியாவில் மார்க்சியம் அறிமுகம் ஆனது. லெனின் வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவிற்கு மார்க்சிய தத்துவம் பரிச்சயம் ஆனது. அன்றைய இந்திய பொதுவுடைமையாளர்களால் மார்க்சியத்தை முழுமையாக சுதந்திரமான சிந்தனையாக் உள் வாங்கிக் கொண்டு வளர்த்துக் கொள்ளவில்லை.
ஆகவே சர்வதெச பொதுவுடைமை கட்சிகளில் இருந்துவந்த பலவீனமான போக்குகளும் பிற்போக்கான சிந்தனைகளும் இந்திய பொதுவுடைமை இயக்கத்தை எளிதில் ஆட்கொண்டது.
இரசியசார்பு சீனசார்பு என வெளிப்படையாகவே இந்திய பொதுவுடைமையாளர்களின் சிந்தனையில் ஒரு சார்பு தன்மை காணப்பட்டது. இது ஏறத்தாழ அனைத்துக் குழுக்களின் சிந்தனை முறையும் அவ்வாறே இருந்தது.
இரசியாவிலும் சீனாவிலும் பொதுவுடைமை யாளர்களின் தலைமை தர்ந்த பின்னரே மார்க்சியத்தை இந்தியாவின் குறிப்பான நிலைமைகளுக்கு பொருத்துவது குறித்து யோசிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தமக்கே உரிய தத்துவ பலவீனத்தால் இம்முயற்சியும் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறியே.
இந்திய சிந்தனை மரபு என்பது தனிச்சிறப்பு வாய்ந்ததும், சிக்கலானதுமாகும். இதில் ஏராளமான தத்துவ போக்குகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.இந்திய மரபு தத்துவங்கள் குறித்து இந்திய பொதுவுடைமை யாளர்களிடையே எப்பொதுமே ஒரு உதாசீனமான போக்கு நிலவி வந்துள்ளது.
இந்திய பொதுவுடைமையாளர்கள் இந்திய சிந்தனைமரபிலுள்ள பொருள்முதல்வாத சிந்தனையையோ அல்லது இயங்கியல் கூறுகளையோ பயில்வதோ அல்லது பயிற்றுவிப்பதோ இல்லை. அவற்றின் பலவீனங்களை களைந்து தனிச்சிறப்புகளைக் கண்டறிந்து அவற்றை உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க என்றுமே விரும்பியதில்லை.
இதன் விளைவாக இவர்கள் இந்திய மரபு தத்துவங்களில் உள்ள பிற்போக்கான தத்துவங்களையே பிரதிநிதித்துவ படுத்துகின்றனர். இந்திய சிந்தனைமரபிலுள்ள பொருள்முதல்வாத பாரம்பரியத்தை உரிமைக் கொண்டாடுபவர்களாக இருந்தாலும் அதன் பலவீனமான அம்சங்களூக்கு ஆட்பட்டுப் போனதில் வியப்பேதுமில்லை.
ம்ம்...அருமை தோழர்...தொடருங்கள்...நானும் இதை என் வலைபூவில் பதிவு செய்து செய்துகொண்டு இருக்கிறேன்...உங்கள் வலைபூவின் முகவரி இட்டு :))
பதிலளிநீக்குகட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட ஒரு வாக்கியம் ஒன்றில் சர்வதேச பொது உடமை கட்சிகளில் இருந்து வந்த பலவீனமான போக்குகள் பிற்போக்கு சிந்தனைகள் இந்திய பொது உடமை வாதிகளை பற்றி கொண்டது என்று குறிப்பிட பட்டுள்ளது எது அவைகள் என்று தெளிவு படுத்தி இருக்கலாம்.
பதிலளிநீக்கு