மி
கை யதார்த்தவாதமும் சோசலிச யதார்த்தவாதமும்1920- களிலிருந்து 1950-கள் வரை இலத்தீன் அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் இடதுசாரி எழுத்தாளர்கள் மீது செல்வாக்கு செலுத்திய இரண்டு முதன்மையான அரசியல், அழகியல் நிலைப்பாடுகள் மிகை யதார்த்தவாதமும் சோசலிச யதார்த்தவாதமும் ஆகும்.
1936-
இல் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் தொடங்கியதும் அதுவரை மிகை யதார்த்தவாத பாணியில் கவிதைகள் எழுதி வந்தவர்களில் பலர் - குறிப்பாக செஸர் வால்லெயோ (Cesar Vallejo), ர·பேல் அல்பெர்ட்டி (Rafael Alberti), லூயி செமுடா (Louis Cemuda), பாப்லோ நெரூடா ஆகியோர் - சாதாரண மக்களையும் எளிதில் சென்றடையக்கூடிய கவிதைகளை எழுதத் தொடங்கினர்.
ஆனால் பாசிச எதிர்ப்பில் உறுதியாக நின்ற இடதுசாரிக் கவிஞர்களில் ஒக்டோவியா பாஸ் (Octavia Paaz), வின்செந்த் ஹயுடொப்ரெ (Vincente Huyidobre) ஆகியோர் பரிசோதனைப் பாணி, மிகை யதார்த்தவாதம் பாணிக் கவிதைகளை எழுதுவதையோ அல்லது மிகை யதார்த்தவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதையோ ஒருபோதும் கைவிடவில்லை. ஸ்பெயினின் புகழ்பெற்ற நாடகாசிரியரும் கவிஞரும், பாசிசவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவருமான, பெடெரிகோ கார்ஸியா லோர்கா (Federico Garcia Lorca) கடைசிவரை மிகை யதார்த்தவாதக் கவிதைகள் எழுதிவந்தனர்
.
மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் எற்றுக்கொண்டிருந்த கலைஞர்களில் சோசலிச யதார்த்தவாதத்தைக் கடுமையாக விமர்சித்தவர்களும் இருந்தனர். அதற்கு மாற்றாக அவர்கள் மிகை யதார்த்தவாதத்தை உயர்த்துப் பிடித்தனர். அவர்களில் முதன்மையானவர்· பிரெஞ்சுக் கவிஞர் ஆன்ரே பிரித்தோன் (Andre Britton). அவரும் லூயி அரகோன் (Louis Aragon), போல் எலுவர்ட் (Paul Eluard) ஆகிய இரு கவிஞர்களும் அன்று பிரான்சின் இடதுசாரி மிகை யதார்த்தவாதத்தின் மும்மூர்த்திகளாக விளங்கினர்
.
இந்த இருவரும் இணந்து எழுதிய 'சர்ரியலிச அறிக்கை', மிகை யதார்த்தவாத அழகியல் கலைஞர்களுக்கு வழங்கும் முழுமையான சுதந்திரம், கம்யூனிசப் புரட்சியால் உத்திரவாதம் செய்யப்படும் தனிமனித வளர்ச்சி, தனிமனித சுதந்திரம் கியவற்றை ஒத்ததுதான் என்று கூறியது
.
சோசலிச யதார்த்தவாதத்தை வெளிப்படையாக தரித்த லூயி அரகோனும் போல் எலுவர்டும்கூட, நெரூடாவைப் போலவே மிகை யதார்த்தவாத பாணியை முழுமையாகக் கைவிடவில்லை. தன்விருப்பநிலையிலிருந்து, புறத்தூண்டுதலற்ற, இயல்பான, அகத் தூண்டுதலிலான படைப்பியக்கத்திற்கு மிகை யதார்த்தவாதம் தந்து வந்த முக்கியத்துவம் மேற்சொன்ன மூவரின் கவிதையாக்கங்களில் கடைசிவரை பயணம் செய்தன
.
மி
கை யதார்த்தவாதத்திற்கும் யதார்த்தவாதத்திற்கும் உள்ள வேறுபாடுகள்1. யதார்த்தவாதத்தில் சமூகம் நேரடியாக புறவயமாக அணுகப்படுகிறது. மிகை யதார்த்தவாதத்தில் புறவயத்தை விட அகவய அணுகுமுறை அதிகம். மிகை யதார்த்தவாத விசயங்களான கனவுகள், நம்பிக்கை, பயம், விருப்புகள்,
விளங்கமுடியா அடிமன புதிர்களுடன் இணைப்பது முக்கியமாகும்
2. யதார்த்தவாதத்தில் சமூக ஆய்வு மையமாக இடம் பெறுகிறது. மிகை யதார்த்தவாதத்தில் இந்த ஆய்வு அதிகம் இடம் பெறுவதில்லை
.
3.
யதார்த்தவாதத்தில் காரண காரியத் தொடர்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மிகை யதார்த்தவாதத்தில் இது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
4.
யதார்த்தவாதத்தில் தர்க்கரீதியான முறை உள்ளது. மிகை யதார்த்தவாதம் அதர்க்கமானது.
5.
யதார்த்த வாதத்தில் வரலாற்று முறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மிகை யதார்த்தவாதத்தில் இது மறுக்கப்படுகிறது.
மிகை யதார்த்தவாத விற்பன்னர்கள் வரையும் ஓவியங்களின் கருத்துக்கள் சுலபமாக உய்த்தறியப்பட முடியாதவை (Abstract வடிவங்கள்). பாரம்பரிய ஒவியங்களில் நிஜமான வடிவங்களே பிரதிபலிக்கப்பட்டிருக்கும். ஆனால், மிகை யதார்த்தவாத ஓவியங்களோ நிஜமான வடிவங்களுடன் கற்பனையான அல்லது உளவியல் சார்ந்ததான வடிவங்களையும் முன்னிறுத்திப் புதுமை சேர்த்தன
.
இவ்வாறு கனவுகளையும் கற்பனைகளையும் வரைவது அல்லது அவற்றிலிருந்து சிந்திப்பது புதுமையான பல முறைகளை கலையுலகுக்கு அறிமுகம் செய்தது. எழுந்தவாரியாக கைபோன போக்கில் கீறுதல் ஓவியத்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட ஒவியங்களை, நவீன ஒவியங்களென்ற பெயரில் நாம் அறிந்திருக்கின்றோம்
.
கவிதைகளிலும் இதன் பாதிப்பு இருந்து வருகின்றது. உதாரணமாக, கவிதையெழுதுவதில் ஒரு புதிய முறையை இது அறிமுகம் செய்தது. வார்த்தைகளை எழுந்தவாரியாக, மனம் போகும் போக்கில் எழுதுதல் ஒரு கவிவடிவமாகியது. தமிழில் இப்படிப்பட்ட கவிதைகளின் தெளிவான விபரங்களை அறிய முடியவில்லை. கற்பனையினை அள்ளித்தெளித்து, படிமங்களையும் குறியீடுகளையும் செறிவாகக் கொண்ட மிகை யதார்த்தவாதம் கவிதைகளும் எழுதப்பட்டன. அப்துல் ரஹுமானின் பால்வீதி இப்படியானதொரு தொகுப்பாகும்
.
கவிஞ்ஜர் திருலோக சீதாராம் என்ற கவிஞர், 1940ல் ஆரம்பித்து சிவாஜி என்ற பத்திரிக்கையை 1967 வரை வாரப் பத்திரிக்கையாகவும், அதற்குப் பின் மாத இதழாகவும் நடத்தி 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வந்த சிற்றிதழாகச் சாதனை புரிந்தவர். தமிழ்க் கவிதையை "மிகை யதார்த்தவாத" பரிமாணத்திற்குத் திறம்பட எடுத்துச் சென்றவர்
எனப் போற்றப்படுகிறார்.
துணை நூல்கள்
1.
20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கொள்கைகள் சோ.கிருஷ்ணரா2.
பாப்லோ நெரூடாவின் கவிதைக் கோட்பாடு -எஸ்.வி.ராஜதுரை3.
ரியலிசம், சோசலிஸ்ட் ரியலிசம், மார்க்சியம் -கார்த்திகேசு சிவத்தம்பி
தங்களது இக்கட்டுரை மிக நன்கு அமைந்துள்ளது. தங்களது ஈமெயில் முகவரியை தெரிந்துகொள்ள இயலுமா>
பதிலளிநீக்குநன்றி
அன்புடன்
சிக்கிமுக்கி தாரா கணேசன்
www.chikkymukky.com