மிகைஎதார்த்தவாதம்
சர்ரியலிசம் என்பது ஐரோப்பாவில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய ஒரு கலை இலக்கிய கோட்பாடாகும். சர்ரியலிசம் என்ற ஆங்கில வார்த்தை 'மிகைஎதார்த்தவாதம் என்று தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதை வேறுபல சொற்களாலும் குறிக்கப்படுகின்றன. அகஎதார்த்தவாதம் என்றும், மீமெய்யியல் என்றும், சர்ரியலிசம் என்றும் அழைக்கப்படுகின்றன. இது பல சொற்களால் குறிக்கப்பெற்றாலும் பரவலாக மிகைஎதார்த்தவாதம் என்றே அழைக்கப்படுவதால் நாமும் இவ்வாறே புழங்கலாம். இக்கோட்பாடானது, எதார்த்தவாதம் என்ற கலை இலக்கியக் கோட்பாட்டிலிருந்து உருவானதாகும். மிகைஎதார்த்தவாதம் என்ற கோட்பாட்டை விளக்குவதற்கு முன் எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டை சிறிதேனும் விளங்கிக் கொள்ளலாம்.
எதார்த்தவாதம்
நீண்ட காலமாக பண்டைய ஐரோப்பாவில் புனைவியல் போன்ற உளம் சார்ந்த கலை இலக்கிய கோட்பாடுகளே செல்வாக்குச் செலுத்தி வந்தன. முதலாளித்துவம் தோன்றியதன் விளைவாகவும் புதிய அறிவியல் கொள்கைகள் தோன்றியதன் விளைவாகவும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எதார்த்தவாதம் என்ற கலை இலக்கியக் கொள்கைத் தோன்றியது. அதுவரை செல்வாக்கு செலுத்தி வந்த உளம் சார்ந்த இலக்கியக் கொள்கைகளுக்கு மாறாக சமூகத்தை அதன் இருப்பைப் புறநிலையாக நின்று சித்தரிக்கத் தொடங்கியது.
எதார்த்தவாதம் என்பது சமூக இருப்பைப் புறவயமாக நோக்கும் ஒரு இலக்கிய கோட்பாடாகும். இது ஒரு படைப்பாயின், இலக்கியவாதியின் மனம், சமூக நிகழ்வுகளைப் புறவயமாக நின்று பிரதிபலிக்கச் செய்யும் ஒரு கலை இலக்கிய அணுகுமுறையாகும். இங்கே அகவய சித்தரிப்புகளுக்கு அதிக இடமில்லை. இத்தகையப் போக்கு, அறிவியல் மனோபாவத்தின் விளைவாகத் தோன்றியது.
சமூக பொருளாதார நிகழ்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாலும், பொருள்முதல்வாத தன்மை இருப்பதாலும் இத்தகையக் கோட்பாட்டினை மார்க்சியம் ஏற்றுக்கொண்டது. எதார்த்தவாதம் மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பிரதிபலிப்புக் கோட்பாடு எனவும் அழைக்கப்பட்டது. இத்தகைய எதார்த்தவாதக் கோட்பாடு, பின்னர் சுபாவ எதார்த்தவாதம் மற்றும் விமரிசன எதார்த்தவாதம் போன்ற கோட்பாடுகள் மார்க்சியவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்டன.
சோசலிச எதார்த்தவாதம்
சோவியத் ரசியாவில் ஏற்பட்ட புரட்சிகளின் விளைவாக 1920 களுக்குப் பின்னர் எதார்த்தவாதக் கொள்கை, சோசலிச எதார்த்தவாதக் கொள்கையாக வளர்த்தெடுக்கப்பட்டது. சோவியத் அரசின் அதிகார பூர்வக் கொள்கையாக சோசலிச எதார்த்தவாதம் என்பது அறிவிக்கப்பட்டது.
1920-30 களில் எத்தகைய இலக்கியச் சித்தரிப்பு இருக்க வேண்டும் என்ற விவாதம் ரஷ்யாவில் இடம் பெற்றிருந்த்து. அவ்வேளையில் இப்புதிய எதார்த்தவாதத்தினைக் குறிப்பதற்குப் பயன்படுத்தவேண்டிய பதம் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வந்தன.
சிலர் ஜீக்ஷீஷீறீமீtணீக்ஷீவீணீஸீ க்ஷீமீணீறீவீsனீ என்றும், சிலர் tமீஸீபீமீஸீtவீஷீus க்ஷீமீணீறீவீsனீ என்றும் (ஒரு குறிக்கோளுக்காகப் பயன்படுத்தப்படும் எதார்த்தவாதம் எந்ன்பது கருத்து) சிலர் னீஷீஸீuனீமீஸீtணீறீ க்ஷீமீணீறீவீsனீ என்றும் (னீஷீஸீuனீமீஸீtணீறீ என்பது பெயரளவிலான எதார்த்தவாதம் என்பதாகும்), சிலர் க்ஷீமீஸ்ஷீறீutவீஷீஸீணீக்ஷீஹ் ணீஸீபீ sஷீநீவீணீறீவீst க்ஷீமீணீறீவீsனீ (புரட்சிகரமான சோசலிச எதார்த்தவாதம்) என்றும் பல சொற்கள் முன் வைக்கப்பட்டு, இறுதியில் சோசலிஸ்ட் ரியலிசம் என்ற சொல் நிலை நிறுத்தப்பட்டது. இறுதியில் ஸ்டனோவின் செல்வாக்குக் காரணமாக 1932 முதல் அதிகார பூர்வமாக இச்சொல்லே பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்ட சோசலிச எதார்த்தவாதம் என்ற இலக்கியக் கருத்தாக்கம் முற்றிலும் அகவயசிந்தனைகளை மறுத்துப் புறவய அணுகுமுறைக்கு இட்டுச்சென்றதாக சோவியத் ரசியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விமரிசனங்கள் எழுந்தன. அதே சமயம் பிற இலக்கியப் போக்குகள் ஒடுக்கப்பட்டன என்றும் கடுமையாக விமரிசிக்கப்பட்டன. ஆகவே இதன் தாக்கம் பிற நாடுகளிலும் வெளிப்பட்டது. இந்த சோசலிச எதார்த்தவாத இலக்கிய கோட்பாட்டிற்கு எதிராக அதன் அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் உளவியல் சார்ந்த இலக்கிய அணுகுமுறைகளை உருவாக ஏதுவானது.
உலகப் போரின் உளவியல் பாதிப்புகள்
இந்நிலையில் ஒரு புறம், முதலாம் உலகபோரின் விளைவுகள் ஐரோப்பிய மக்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது. உலகப் போரின் விளைவாக மக்கள் சொல்லொணா துயரத்தில் மூழ்கியதைக் கண்டு, பெரும் எண்ணிக்கையில் மக்கள் மடிந்ததைக் கண்டு கலையிலக்கியவாதிகளும் கலைஞர்களும் கலக்கமுற்றனர். இத்தகைய கொடுமைகளுக்கும் விளைவுகளுக்கும் காரணம் அதுவரை செல்வாக்கு பெற்றுவந்த அறிவு பூர்வமான சிந்தனைத்தான் எனவும் புறநிலையான அணுகுமுறைதான் எனவும் எண்ணினர். அதாவது சமூக சித்தரிப்புகளில் புறவய அணுகுமுறைக்கு மாறாக, உள்வியல் ரீதியான அணுகுமுறையின் தேடல் இருந்தது.
பிராய்டிசம்
இன்னெருபுறம், பிராய்டு தனது உளவியல் கொள்கைகளை உருவாக்கியளித்தார். இப்போது பிராய்டிச உளவியல் கோட்பாட்டைச் சுருக்கமாகக் காண்போம். பிராய்ட் மனித மனத்தை மூன்றாக பிரிக்கிறார். அடிப்படை மனித உணர்வுகள் (அதாவது மிருக உணர்வுகள்) அடங்கிய உள் மனம். இது இட்(மிபீ) எனப்படுகிறது. நமது கல்வியின் மூலமும் வளர்ப்பின் மூலமும் நம்மில் உருவாகியுள்ள கலாச்சார மனம், சூப்பர் ஈகோ (ஷிuஜீமீக்ஷீ ணிரீஷீ) எனப்படுகிறது. தன் உள் மனத்தைத் திருப்தி செய்து மகிழ மனிதன் எப்போதும் ஆசைப்படுகிறார். இதை பிராய்ட் இன்பக் கோட்பாடு (றிறீமீsuக்ஷீமீ ஜீக்ஷீவீஸீநீவீஜீறீமீ) என்கிறார்.
ஆனால் கலாச்சாரத்தின் விதிமுறைகளால் உருவாக்கப்பட்டுள்ள சமூகத்தில் அது சாத்தியம் அல்ல. எனவே சமூக யதார்த்ததோடு அவன் சமரசம் செய்து கொள்கிறான். இதை பிராய்ட் யதார்த்தக் கோட்பாடு (ஸிமீணீறீவீtஹ் ஜீக்ஷீவீஸீநீவீஜீறீமீ) என்கிறார். இவ்விரு கோட்பாடுகளுக்கும் இடையே நடக்கும் ஆளுமை அல்லது ஈகோ உருவாகிறது. மனிதனின் இயல்பான ஆசைகள் இவ்வாறு அழுத்தி அடக்கப் படும்போது அவை அவன் அடிமத்துக்குள் புதைந்து விடுகின்றன. இதன் விளைவாக மனிதன் இரண்டாகப் பிளவுபட்டு விடுகிறான். அவனுடைய மனம் பற்பல அழுக்குகளினால் ஆனதாக மாறி விடுகிறது. சமூகத்தால் அனுமதிக்கப்பட்டவையும் நமக்கு நாமே அங்கீகரித்துக் கொள்பவையுமான எண்ணங்களும் நினைவுகளும் அடங்கியது போதமனம் (சிஷீஸீநீவீஷீus றீமீஸ்மீறீ). நம்மால் அடக்கப்பட்டு மனதின் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் ஆசைகளும் எண்ணங்களும் நினைவுகளும் அடங்கியது உபபோதம் (ஷிuதீ-நீஷீஸீநீவீஷீus றீமீஸ்மீறீ). இதை நாம் மிக அபூர்வமான தருணங்களில் தவிர வெளியே எடுப்பதில்லை.
மனதின் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் ஆசைகளும் எண்ணங்களும் நினைவுகளும் கனவில் வெளிப்படும். அத்தகைய கனவுக் காட்சிகளையே கலை இலக்கியங்களாக படைப்பது தான் மிகை எதார்த்தவாதம் ஆகும். உளவியல் திறனாய்வுக்கு வித்திட்ட சிக்மண்ட் பிராய்ட் (ஷிவீரீனீuஸீபீ திக்ஷீமீuபீ) மிகை எதார்த்தவாதத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்க்கத்தினை உண்டாக்கினார். உள்வியல் பற்றிய அவரது ஆராய்ச்சியில் கனவுலகினைப் பற்றிய ஆய்வுகள் பலவும் அடங்க்குகின்றன. அவரது சமகாலத்தவரான உளவியல் அறிஞர் டாக் டர். கார்ல் ஜங்க் ( ஞிக்ஷீ. சிணீக்ஷீறீ யிuஸீரீ) என்பவர் தனது கனவுகளையும் கற்பனைகளையும் ஓவியங்களாக வரைந்து காண்பித்தார்.
இவ்வாறாக, ஒரு புறம் சோசலிச எதார்த்தவாதத்தின் மிகையான புறநிலை அணுகுமுறை, இன்னொரு புறம் முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய உளவியல் பாதிப்புகள் ஆகிய இத்தகையப் பின்னணியில் தான் மிகைஎதார்த்தவாதம் தோன்றியது. பிராய்டின் உளவியல் கோட்பாடு, இந்த மிகை எதார்த்தவாத அணுகுமுறைக்கு தனது அகவய அடிப்படையை வழங்கியது. இது எதார்த்தவாத அடிப்படை அணுகுமுறைக்கு எதிராகவும், சோசலிச எதார்த்தவாதத்திற்கு மாற்றாகவும் தோன்றியதுதான் மிகைஎதார்த்தவாதம் என கூறப்படுகின்றது..
மிகைஎதார்த்தவாதம்
மிகைஎதார்த்தவாதக் கொள்கையானது முதலாம் உலகயுத்தம் தோன்றிய காலத்தில் உருவானது என கண்டோம். இது உலகயுத்தத்திற்கு எதிரான எதிப்புணர்வுகளை மிகைஎதார்த்தவாதத்தின் வடிவத்தில் தோன்றியது.
தூக்கத்திலே நனவிலி மனத்தில் இருந்து தோன்றும் கனவுகளைச் சித்தரிக்க முற்படும் கலைப்பரிமாணமாக, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகைஎதார்த்தவாதம் உருவெடுத்தது. இக்கோட்பாட்டின் தாக்கம் பல்வேறு துறைகளிலும் வெளிப்பட்டது. குறிப்பாக ஓவியத்துறையிலே ஏற்பட்ட இதன் தாக்கம் பிரசித்திப்பெற்றதாகும்.
மிகைஎதார்த்தவாதம் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட புதிய ஒழுக்கம் எனவும், அறிவைப் பெறுவதற்குரிய புதிய வழி எனவும் எடுத்துக்காட்டப்பட்டது. மிகைஎதார்த்தவாதம் ஓர் அறிதலின் முயற்சியாக எடுத்துக்காட்டப்பட்டது.
இரண்டு உலக போர்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தோன்றி வளம் பெற்ற மிகைஎதார்த்தவாதமானது 1923-25 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிரமாக வளர்ச்சி பெற்றது. ஏற்கனவே வழக்கிலிருந்த பழக்கவழக்கங்கள் விழுமியங்கள் ஆகியவை விமரிக்கப்பட்டன.
மிகைஎதார்த்தவாத ஆராய்ச்சிகளுக்கும் கண்காட்சிகளுக்கும் என்று 1938 ல் ஒரு கூட்டம் நடத்தப்பெற்றது. அதில் 14 நாடுகளைச் சார்ந்த கலைஞர்கள் பங்கு பெற்றனர். 1930 வரை பிக்காசொவின் ஓவியங்களும் மிகை எதார்த்தவாத வெளியீடுகளை அலங்கரித்தன. பின்னர் மிகைஎதார்த்தவாதம் மெக்சிகோவிற்கும் பிற அமெரிக்க நாடுகளுக்கும் பரவியது. 1954 வரை கிரேக்கம், குவாட்டமாலா, ஆஸ்திரியா, கனட பெல்ஜியம், பிரேசில் போன்ற நாடுகலில் இச்சிந்தனைப் போக்குக் காணப்பட்டது.
பெரிட்டின், ஈலுவாட், அரகான், பேரேட் போன்ற சர்ரியலிச வாதிகளின் படைப்புக்கள் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அழகியல், ஒழுக்கவியல், கற்பிதங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, எவ்விதமான தருக்க விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் இருந்த சிந்தனைமுறையே மிகைஎதார்த்தவாதம் என்று பெரிட்டன் தனது அறிக்கையில் விளக்கினார்.
மிகைஎதார்த்தவாதத்தின் கலை இலக்கியங்கள் வினோதமாயிருந்தன. கவிதைகளும் ஓவியங்களும் கனவுநிலை வருணனைகளாய் இருந்தன. அதில் அகநோக்கு வலியுறுத்தப்பட்டது. தருக்க ரீதியான சிந்தனை, காரணகாரிய ஆராய்ச்சி என்பன முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. அடிமனதை அவதானித்து அதனையே ஓவியமாகவும். கவிதையாகவும், இலக்கியமாகவும் சிற்பமாகவும் மிகை எதார்த்தவாதிகள் படைத்தனர். பிராய்டின் உள்வியற் கருத்துக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். கலை இலக்கியங்களின் ஊற்றாக கனவு எடுத்துக் காட்டப்பட்டது. இவர்களது கலை இலக்கியங்கள் பல கனவுகளாகவும் கனவுநிலை வெளிப்பாடுகளாகவும் காணப்படுகின்றன. கவிதை அடிமன எண்ணங்களை வெளிக்கொண்டு வர சிறந்த ஒரு சாதனம் என இவர்கள் நம்பினர்.
மிகைஎதார்த்தவாதக் கூறுகள்
மனதை தானே இயங்கும் தன்னியக்கமாக காட்டுதல், அழகியல் நோக்குடன் வெளிக்காட்டுதல் போன்றவை மிகைஎதார்த்தவாதத்தின் அடிப்படைக்கூறுகளாகும். காரண காரிய கொள்கையை மிகைஎதார்த்தவாதம் எதிர்க்கிறது. அவ்வாறு காரணம் காண்பது, ஆழ்மனத்தின் கோலங்கள் தங்கு தடையின்றி வெளிவர தடையாயிருக்கின்றது என மிகைஎதார்த்தவாதம் உரைக்கிறது.
கனவுகளுக்கு விளக்கமும் வியாக்கியானமும் கண்டறியப்படகூடாது என்பதையும் கனவுலகில் சஞ்சரிக்கும் சுதந்திரமும் குதூக்கலத்தையும் கொண்டிருக்கவேண்டும் என்பதையும் மிகைஎதார்த்தவாதம் வலியுறுத்துகிறது. கலைகளும் இலக்கியங்களும் இத்தகைய அனுபவத்தில் சஞ்சரிப்பதை இவ்வாதம் முன்மொழிகிறது.
மிகை எதார்த்தவாதம் எதையும் ஆராய்வதை மறுக்கிறது. ஒழுங்கமைத்தலை வெறுக்கிறது. இருப்பதை அப்படியே ஆழ்மனத்தை தூரிகையோடும் பேனாவோடும் இணைத்து கலையழகும் கவினுலகும் காணவேண்டும் என்பது மிகைஎதார்த்தவாதத்தின் அறிவுரையாகும்.
நிறைவாக, எதார்த்தவாதம், சோசலிச எதார்த்தவாதக் கோட்பாடுகள் இறுகிய நிலையில் உறைந்து போனதால்தான் மிகைஎதார்த்தவாதம் போன்ற கலை இலக்கிய கோட்பாடுகள் தோன்றின என்று கூறப்படுகிறது. அதே போல, மிகைஎதார்த்தவாதம் போன்றவை மார்க்சியத்திற்கு எதிராக பின்நவீனத்துவம் வைக்கும் பிற்போக்குக் கோட்பாடுகள் என்ற விமரிசனமும் இருக்கிறது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
அருமையான கட்டுரை. சரளமான ஓட்டம். தொடர்ந்து நீங்கள் எழுதாதது தமிழுக்கு பெரும் நஷ்டம்
பதிலளிநீக்கு