கருத்தியல் என்பது ஓர் ஒழுங்குபடுத்தபட்ட கருத்துக்களின் சேர்க்கை என்று கூறலாம். சமூகம் சார்ந்த ஒரு பொதுவான, அருவமான சிந்தனை ஆகும். இது சமூக மனித நடைமுறையைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டது. அதை கொண்டு ஒரு சமூக ஓட்டத்தை வழிமுறை படுத்தவும் அல்லது வழிமாறச் செய்யவும் இயலும்.
அரசியல் துறையாகட்டும் சமூக விஞ்ஞான துறையாகட்டும் அறிவுதோற்றவியல் என்ற துறையாகட்டும் அல்லது இன்னும் இது போன்ற துறைகளிலாகட்டும் அந்தந்த துறைக்கான கருத்தியல்கள் உருவாகி இருப்பதைக் காணலாம்.
இது தத்துவத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது. தத்துவம் என்பது அனைத்து துறைகளுக்கும் பொதுவான அருவமான சிந்தனையைக் கொண்டதாகும். தத்துவம் என்பது வாழ்க்கையை வாழும் முறையாகக் கொள்ளலாம். ஆனால் கருத்தியலைப் பொருத்தவரை அது வாழ்க்கை எப்படி வாழவேண்டும் என்பதை காட்டும்.
அன்றாட சமூக வாழ்வில் கூட நாம் பல கருத்தியல்களைக் கேட்கமுடியும். கருத்தியல் என்பது சமூக இயக்கத்தை விரைவுபடுத்துவதாகவும் அல்லது கட்டுப்படுத்துவதாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் நடுநிலையான கருத்தியல்களும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமாகவே இருக்கும்.
கருத்தியல்கள் குழுக்களின் சிந்தனையாகவோ அல்லது வர்க்கத்தின் சிந்தனையாகவோ அல்லது அமைப்புக்களின் சிந்தனையாகவோ இருக்கின்றது. அந்த குழு அல்லது வர்க்கம் அல்லது அமைப்பு தனக்கென்று உள்ள கருத்துக்களை தங்களது நோக்கத்திற்கேற்ப கருத்தியல்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
காரல் மார்க்ஸ் கருத்தியலைச் சமூக மறு உற்பத்திக்கான ஒரு கருவி என்ற தமக்கே உரிய கண்ணோட்டத்தில் விளக்குவார். இதை சமூக மேற்கட்டுமானத்தின் ஒரு பகுதியாக வரையறுப்பார். மார்க்ஸ் சமூகத்தை ஆய்வுச் செய்யும் போது அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற வகைப்பாட்டைப் பயன்படுத்துவார். இது மார்க்ஸியத்தின் முக்கிய கருத்தாக்கம் ஆகும்.
மேற்கட்டுமானம் அடித்தளத்திருந்து எழுகின்றது.. மேற்கட்டுமானம் சட்ட அமைப்பு அரசியல் அமைப்பு மற்றும் சமயம் போன்ற கருத்தியல்களை கொண்டது. மார்க்ஸைப் பொருத்தவரை அடித்தம் தான் மேற்கட்டுமானத்தைத் தீர்மானிக்கின்றது. ஏனென்றால் ஆளும் வர்க்கமே சமூக உற்பத்திக் கருவிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் சமூகத்தின் கருத்தியல்களைக் கொண்டு தனக்கு சேவை செய்ய வைக்கின்றது. ஆகவே சமூக கருத்தியல் என்பது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. அது எதிர்நிலையில் இருக்கும் குழுக்களைக் குழப்புவதாக அமைகின்றது. இதைத் தான் மார்க்ஸ் தவறான உணர்வு என்று சொல்லுவார்.
மார்ச்சியத்தின் மீதுள்ள காட்டமான எதிர்ப்பு என்னவென்றால் அது பொருளாதார காரணிகளின் மீது அதிக அக்கறைக் கொண்டிருப்பது என்பது தான். ஆளும் வர்க்கத்தின் கருத்தியல்கள் என்பது எப்போதுமே அது அனைத்து மக்கள் மீதும் தனது கருத்தியல்களை திணித்த வண்ணம் இருக்கும். தனக்கான செல்வாக்கை இவ்வாறுதான் ஆளும் வர்க்கம் பெற்றுக்கொள்கின்றது. அதன் மூலம் அனைவருக்குமான நலன்களைப் பிரதிபலிப்பதாகக் காட்டிக்கொள்கின்றது.
ஜார்ஜ் லூக்காஸ் இதைத் தான் வர்க்க உண்ர்வு என்று கூறுவார். ஆண்ட்னியோ கிராம்ஸ்கி என்பவர் இதை கலாச்சார மேலாதிக்கம் என்ற தத்துவத்தை வளர்த்தெடுப்பார். ஒரு சமூகத்தில் உள்ளவர்கள் சில விசயங்களில் ஒரே மாதிரி சிந்திக்க தொடங்கும் போது நாம் கிராம்சியின் கருத்தாக்கமான ‘கருத்தியல் மேலாதிக்கம்’ என்ற கருத்தாக்கத்திற்கு வந்தடைகின்றோம்.
"
மார்ச்சிய சிந்தனையின்படி பொருளாதாரத்தை அடித்தளம் என்று கட்டப்படுகின்றன. ஒன்று நான் ஏற்கனவே நன்கு அறிந்த அரசியல் மேற்கட்டுமானம் மற்றொன்று கிராம்சி சொல்லும் குடிமைச் சமூக மேற்கட்டுமானம். அரசியல் கட்டுமானம் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம். அதிகாரம் போன்ற வன்முறை அல்லது பலாத்கார வடிவங்கள் நேரடியாக எந்தவித ஒளிவுமறைவுமின்றி தொழில்படுகின்ற்து. மற்றொன்றான குடிமைச் சமூக கட்டுமானம் சமயம் குடும்பம் கல்வி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களின் வழி ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான பொது மனோபாவம் ஒன்றை உருவாக்குகிறது. அதாவது அரசுக்கு ஆதரவான பொதுச் சம்மதத்தை குடிமைச் சமூக உருவாக்கித் தருகிறது.."
"
வர்க்க சமூகங்களில் ஆளும் வர்க்கம் குடிமைச் சமூகத்தின் வழி தனது கருத்தியல் மற்றும் கலாச்சார மேலாண்மையைச் சாதிக்கின்ற்து என்று கிராம்சி குறிப்பிட்டார். குடிமைச் சமூக நிறுவனங்களின் வழி ஆளும் வர்க்கம் தனது நேரடியான் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை மறைத்துக் கொண்டு தான் ஒரு பொது ஒழுங்கில் சமூக ஏற்பாட்டில் அல்லது சமூக அமைதியில் அக்கறை கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது.
.'
குடிமைச் சமூகம்.. மேலாண்மை போன்ற கருத்தாக்கங்களின் வழி ஆளும் வர்க்கம் உருவாக்கும் பொதுச் சமூக மனோபாவத்தின் உள் இயங்கியலை கிராம்சி மிக அற்புதமாக கண்டறிந்து சொல்லியுள்ளார் என்று அவரைப் பலர் பாராட்டுகின்றனர். ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன் அல்லது அரசு எந்திரத்தின் அதிகாரம் எனும் ஒற்றைத் தளத்தைத் தாண்டி அதிகச் சிக்கலான கூடுதல் பன்மைத்தன்மை கொண்ட ஒரு தளத்தை நோக்கி கிராம்சி பயணித்துள்ளார் என்று நாம் அதனை அடையாளப் படுத்த முடியும்..(முத்துமோகன்)
முதலாளித்துவத்தின் கருத்தியல்களாவன: 1.தாரளவாதம் 2.சமூக சனநாயகம் 3. நவீன தாரளவாதம். லூயிஸ் அல்தூசர் அரசு எந்திரம் பற்றிய கருத்தியலை வளர்த்தெடுப்பார்..
அரசியல்
கருத்தியல்கள்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனக்கான கருத்தியல்களைக் கொண்டிருக்கின்றது. தனது திட்டத்தையும் செயல்பாடுகளையும் தனக்கான கருத்தியல்கள் மூலமாக மட்டுமே நடைமுறைபடுத்திக் கொள்கின்றது.
ஒரு சமூக இயக்கம் அல்லது சமூக நிறுவனம் அல்லது வர்க்கம் அல்லது குழு தனது செயல்பாட்டிற்கான கொள்கைகள் கோட்பாடுகள் கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கொள்கின்றது.அதன் மூலம் அந்த சமூகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் எவ்வ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொள்கின்றது.
ஒரு சமூகத்தில் சனநாயகம் படைக்க வேண்டுமா அல்லது சோசலிசம் படைக்க வேண்டுமா என்பதற்கு ஒரு இயக்கத்தின் கருத்தியல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆக கருத்தியல்கள் சமூக பொருளாதார கட்டமைப்பின் மீது ஒருசில சமயங்களில் செலுத்தும் தீர்மானகரமான பாத்திரத்தை மறுக்க முடியாது.
அதேபோல ஆளும் வர்க்கத்தின் கருத்தியல்கள் சமூகத்தின் போக்கை எவ்வாறு தீர்மானித்தன என்பதை நாம் வரலாற்றில் கண்டிருக்கிறோம். புhர்ப்பனீயத்தின் பிற்போக்கு கருத்தியல்கள் ஏவ்வாறு நம் சமுகத்தைக் கட்டிப் போட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக