போராட்டம் Vs.. ஒன்றுமை
பொருள் என்பது அஃதாகவும் அதே நேரத்தில் அதல்லாத வேறொன்றாகவும் இருக்கின்றன. இரண்டு நிலைகளிலும் முறையே இந்த இரண்டு எதிர்வுகள் செயல்படுகின்றன. அதாவது பொருள் அஃதாக இருப்புக் கொள்ளும் போது எதிர்மறைகளின் ஐக்கியம் என்பது மேலோங்கிய செயலாகவும், அஃதல்லாத வேறு ஒன்றாக மாறும் போது எதிர்மறைகளின் போராட்டம் என்பது மேலோங்கிய அம்சமாகவும் இருக்கின்றன.
பொருளியக்கத்தில் உள்ள முரண்பாட்டின் இரு அம்சங்களை - செயல்பாடுகளைத் தனித்தனியே பிரித்தெடுக்க இயலாது. எதிர்மறைகளின் ஐக்கியம் என்பது பொருளீயத்தன்மையும், எதிர்மறைகளின் போராட்டம் என்பது பொருளியக்கத்தையும் காட்டுகின்றன.
மார்க்சிய தத்துவத்தின் மூலவர்கள் இந்த இரண்டு அம்சங்களை பற்றியும் அவற்றிற்கு இடையே உள்ள உறவுகளைப் பற்றியும் ஆராய்ச்சிச் செய்துள்ளனர்.
போராட்டம் முற்றொருமையானது. ஐக்கியம் சார்புத் தன்மை வாய்ந்தது. போன்ற பல்வேறுத் தன்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
பொது பண்பு Vs தனிச் சிறப்பு
வேதாந்தம் பொதுப்பண்மை மட்டுமே கருத்தில் கொள்ளும். ஆனால் வைசேடிகம் இதற்கு மாறாக தனிசிறப்பியல்புகளுக்கும், பொதுபண்பிற்கும் முக்கியத்துவம் அளித்து அதனடிப்படையில் பொருட்களைப் பார்க்கின்றது. இடைக்காலத்தில் உருவான விசிட்டாத்வைதம் பொருளின் தனிச்சிறப்புகளையும் சுட்டிக் காட்டுகின்றது.
ஆதிப்பொதுவுடைமை சமூகம், அடிமைஉடைமை சமூகம், நிலபிரபுத்துவ சமூகம, முதலாளித்துவ சமூகம், சோசலிச சமூகம் என்ற மார்க்சிய மரவுவழி சமூக வரலாற்றுப் பகுப்பு பொதுத் தன்மையை குறித்து நிற்கின்றன. ஆனால் கீழ் கொடுங்கோன்மை, ஆகிய உற்பத்தி முறை, சாதியம் போன்றவை இந்திய துணைகண்டத்தின் பருண்மையான சிறப்பியல்புகளை உணர்த்துகின்றன.
வலது Vs இடது
சர்வதேசிய கம்யூனிச இயக்கத்தில் திரிவுவாதத்திற்கு எதிரான போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருத்தல் வாதத்திற்கு எதிராக ரஷ்யாவில் லெனினும், திரிபுவாதத்திற்கு எதிராக சீனாவில் மாவோவும் நடத்திய போராட்டங்கள் நமக்கு வழிகாட்டியாய் அமைந்துள்ளன.
குறிப்பாக ரஷ்ய கம்யூனிஸ்டு, கட்சியின் வலது சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக சீன கம்யூனிஸ்டு கட்சி நடத்திய ‘மாபெரும் விவாதம்‘ புகழ் வாய்ந்ததாகும்
இந்தியாவிலும் கூட திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டம் செழுமை வாய்ந்த ஒன்றாகும்.ஆனால் இடது தீவிரவாத நிலையீட்டிலிருந்து திரிவுவாதத்திற்கு எதிராக போராடியதால் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது.
திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. மாறாக இது தீவிரவாதத்தோடும் நாம் போர்புரிய வேண்டிய காட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த இருபோக்குகளும் சுதந்திர போராட்ட காலத்திலேயே வெளிபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிச இயக்கத்திலும் தொடர்ந்துள்ளது காணலாம். இப்போது இருபோக்குகளின் தன்மைகளையும், தத்துவார்த்த பின்னணியைப் பற்றியும் அறியாமல் அவற்றிற்கு எதிரான போராட்டத்தை கூர்மைபடுத்த இயலாது.
முதலில் வலது சந்தர்ப்ப வாதத்திற்கு வாய்த்த தத்துவார்த்த பின்னனையை காண தகும். வலது சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொதுவாக அது வர்க்கபோராட்டத்தை மறுக்கும், சட்டவாதத்தில் மூழ்கி திளைக்கும், தேர்தல் பாதையை உயர்த்தி பிடிக்கும் என்பதாகும்.
வர்க்க போராட்டத்தை மறுப்பது அல்லது புறக்கணிப்பது என்பதன் மூலம் சமூகத்திலுள்ள முரண்களை அது மறுக்கின்றது. சமூக முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்ள தவிர்ப்பது. அதாவது சமூகம் முரணின்றி இயங்குவதாக கருதுகின்றது.
இந்த வாதம் ஒருவகையில் புறநிலைவாதத்தை கொண்டிருப்பதை உணரமுடியும். அதாவது முரண்பாடுகளை கொண்டு சமூகத்தை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. அது தானாக மாறும் என்ற கருத்தாக்கத்தை கொண்டிருப்பதாகும். அதற்கு புரட்சிகர கருத்தாக்கத்தை கொண்டிருப்பதாகும். அதற்கு புரட்சிகர நடைமுறை தேவையில்லை என்றாகிறது. இறுதியாக இது மனித நடைமுறையை மறுப்பதற்கு இட்டுச்செல்கின்றது.
பொருளையும் இயக்கத்¬யும் பிரித்து பார்க்க இயலாது. பொருளின்றி இயக்கமில்லை. இயக்கமின்றி பொருளில்லை. பொருளுக்குள் உள்ள எதிர் எதிரான முரண்களே அது இயங்குவதற்கான அடிப்படையான காரணமாகம். முரண்பாடு இரண்டு பண்புகளை கொண்டிருக்கின்றது. ஒன்று ஐக்கியம், இரண்டு போராட்டம். சந்தர்ப்பவாதிகள் இரண்டு கூறுகளையும் தனித்தனியே பிரித்து ஒன்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கின்றனர். வலது திரிபு வாதிகள் முரண்டில் உள்ள ‘ஐக்கியம்‘ என்ற கூற்றை மட்டும் எடுத்தாள்கின்றனர்.
சமூக வளர்ச்சி கோட்பாடு என்பது அளவுமாற்றம் மற்றும் பண்புமாற்றம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாகும். வலது திரிபுவாதத்தினர் சமூக வளர்ச்சி கோட்பாட்டில் அளவு மாற்றத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர். சமூக இயக்கத்தை ர்த்துப்போக செய்கின்றனர்.
இவற்றிற்கெல்லாம் மறுதலையாக இடது தீவிரவாதம் செயலாற்றுகின்றது . இடது தீவிரவாத்தின் பொதுவான பண்புகளை ஆயுத போராட்டத்தை மட்டுமே உயர்த்தி பிடிப்பது, சட்டவிரோத வாதத்தில் மூழ்கியிருந்து, மேலும் வர்க்க போராட்டத்தை கொச்சையாக பார்ப்பது போன்றவை ஆகம்.
வலது சந்தர்ப்பவாதம் புறநிலைவாத கோட்பாட்டை கடைபிடிப்பது போல, இடது தீவிரவாத அகநிலை வாதத்தில் சிக்கித் தவிப்பதை காணவியலும். முரண்பாட்டில் உள்ள இரண்டு கூறுகளில் ‘போராட்டத்தை‘ மட்டுமே உயர்த்தி பிடிப்பது. சமூக இயக்கத்தை கொச்சையாக பார்க்கின்றது.
சமூகவளர்ச்சி கோட்பாட்டில் பண்பு மாற்றம் மட்டுமே இது தீவிர வாதத்தால் உணர முடிகின்றது. அளவுமாற்றம் இவர்களை பொருத்தவரை சொக்கையாக படுகின்றது. சமூக இயக்கத்தை இறுகியதாக காணுப் பார்க்கும் கண்ணோட்டம் இவர்கள் மத்தியில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக