பொருளியக்கம் - அக/புற முரண்கள்
தனித்தனி மனிதர்களுக்கு இடையிலான ஒட்டுறவு காலப்போக்கில் வர்க்க உறவாக மாற்றியமைக்கப்படுகின்றன.
ஒரு பொருள் உள்முரண்பாடுகளால் மட்டும் இயங்கவில்லை, புற முரண்பாடுகளாலும் இயக்கப்படுகின்றன. பொருளின் இயக்கத்தில் அக முரண்பாடுகளையும், புற முரண்பாடுகளை பிரிக்க இயலாது அவை ஒன்றை ஒன்று ஊடுருவி வினைப்புரிகின்றன.
ஒருபொருளுக்கும் இன்னொன்றுக்கும் உள்ள முரண்பாடு ஒரு கட்டத்தில் தற்காலிகமாக தீர்க்கப்படும் போது, அது அப்பொருளுக்குள் உள்ள முரண்பாட்டைக் கூர்மைப்படுத்துகின்றது. அக முரண்பாடுகள் தீர்க்கப்படும்போது புறமுரண்பாடுகள் கூர்மை அடைகின்றன.
அகமுரண்£டானது புற முரண்பாட்டிற்கும், புறமுரண்பாடானது அக முரண்பாட்டிற்கும் இட்டுச் செல்கிந்றன. இரண்டிற்குமான உறவு இயங்கியல் ரீதியானது. உதாரணமாக ஒரு சாதிக்கும் இன்னொரு சாதிக்கும் இடையிலுள்ள முரண்பாடு, ஒரு குறிப்பிட்ட சாதிக்குள்ளே உள்ளார்ந்து உள்ள வர்க்க முரண்பாட்டை தோற்றுவிக்க இட்டுசெல்கின்றது.. இன்னொருபுறம் ஒரு சாதிக்குள்ளே எழும் வர்க்க முரண்பாடு இருசாதிக்குள் உள்ள முரண்பாட்டை எழுப்புகின்றது.
ஆதியிலிருந்தே மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பிரதான முரண்பாடு தற்காலிகமாக பின்னுக்கு தள்ளப்பட்டு, மனித சமூகத்தில் வர்க்க முரண்பாடாக உருவாகியுள்ளது இறுதியில் வர்க்க முரண்பாடு தீர்க்கப்படும்போது மீண்டும் மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாடு உயர்ந்த வடிவில் எழும்.
ஒரு பொருளின் வளர்ச்சி மாற்றத்திற்கு தீர்மானகரமான சக்தியாக திகழ்வது அகமுரண்பாடுகளா புறமுரண்பாடுகளா என்ற வாதம் நீண்டவரலாற்றை கொண்டுள்ளது. இரண்டுமே, தீர்மானிக்கிர சக்தியாக இருக்கின்றன. மனிதனுக்குள் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம் நித்தமும், நடைபெற்றுக் கொண்டுருக்கிற அதே நேரத்தில் மனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள முரண்பாடும் நிலவியுள்ளது.
இந்திய சமூகத்தில் நிலபிரபுத்துவ, முதலாளித்துவ முரண்பாடுகள் - அகமுரண்பாடுகள் - நிலவும் அதசமயம் இந்திய சகத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் உள்ள முரண்பாடும் நிலவுவதையும் காணமுடியும்.
கம்யூனிச இயக்கம் தமக்குள் முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதேபோல புற உலகத்தோடும் முரண்கொண்டு தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கின்றது. ஒரு பொருள் தனக்குள்ளேயும், தனக்கு வெளியேயும் முரண்பாடுகளை கொண்டுள்ளது. இரண்டுமே மாறி மாறி தீர்மானகரமான முரண்களாக ஆகின்றன.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக