மனிதனின் வரலாறு குகை ஓவியங்களிலும், சித்திர எழுத்துக்களிலும், தூக்கியெறியப்பட்ட கல்லுளிகளிலும், மண்பாண்டங்களிலும், மதச் சிலைகளிலும், உதறப்பட்ட கூடைகளிலும், இன்னும், பழங்காலம் தூக்கியெறிந்த சின்னச்சின்ன தூள்களிலும் துகடுகளிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. தொல்பொருள் துறை சார்ந்த மானுடவியலாளர்கள், பழங்காலச் சமூகம் எப்படி இருந்தது அதன் கலாச்சாரம் என்ன என்பதை மீண்டும் சித்தரிக்க முயல்கிறார்கள்.
தொல்பொருள்துறை சார்ந்த மானுடவியலாளர்கள் முன்பு கிரீஸ், ரோம், எகிப்து போன்ற பழங்கால புகழ்பெற்ற சமூகங்களையே ஆராய்ந்து வந்தார்கள். இன்று அவர்கள் முன்னும் பின்னும் அதை நீட்டி, மூன்று கோடி வருடங்களுக்கு முன்னர் இருந்த ஆரம்பகால மனிதனின் எலும்பு முதல், 19ஆம் நூற்றாண்டு அமெரிக்காவின் வாழ்வு முறையையும் அதன் சமூகங்களையும் ஆராய்கிறார்கள்.
தொல்பொருள் துறையினர், கலாச்சார மூலதன மேலாண்மையிலும், மத்திய மாநில அரசுகளுக்கு தேசத்தின் கட்டட, வரலாற்று, கலாச்சார பாரம்பரியத்தை காப்பாற்ற உதவுவது போன்றவற்றிலும் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக