செவ்வாய், 21 ஜூலை, 2009

மார்க்சியம்- முன்னுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தோன்றியது மார்ச்சியம் ஆகும். இத்தத்துவம் தோன்றுவதற்கு ஒரு வரலாற்றுச் சூழல் காரணமாக இருந்தது. மனித சமுதாயம் நூற்றாண்டுக் காலங்களாகத் தொழில் துறையில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டு குறிப்பிட்டத் தக்க மாற்றாங்கள் உருவாகியதால் தொழில் துறையின் புரட்சிக் காலமான அது அமைந்தது. தொழில் துறை பெரும் வளர்ச்சியடைந்தது.
தொழில் துறையின் உற்பத்தி சக்திகளாக விளங்கிய தொழிலாளர்கள் எண்ணிக்கைப் பெருகியது. அக்காலத்தில் airooppiya waadukaLin மன்னராட்சி நடைபெற்றதால குடியாட்சி உரிமைகள் மறுக்கப்பட்டன.இதனால் நில உடைமை அமைப்பு வலுப் பெற்றிருந்தது. தொழிற்சாலைகளில் உழைப்பதற்குத் தொழிலாளிகளின் கூலி உழைப்புத் தேவைப்பட்டது. பொருள்களை உற்பத்தி செய்வதற்கு கச்சாப் பொருட்கள் தேவைப்பட்டன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனைசெய்து இலாபத்தைப் பெறுவற்கு சந்தைகள் தேவைப் பட்டன. ஆனால் இதற்கு நில உடைமை அமைப்பு தடையாக அமைந்தது. இத்தடையை ஒரு வர்க்கமாக உருவாகிய தொழிலாளிகளும் முன்னேற முன்னேற முதலாளிகளும் உணர்ந்தனர்.வ‌லுப்பெற்றிருந்த‌ நில‌ உடைமை அமைப்பைத் த‌க‌ர்த்தெறிய‌ வேண்டிய‌ ஒரு புதிய‌ சூழ்நிலை த‌விர்க்க‌ முடியாம‌ல் உருவாகிய‌து. இவ்விர‌ண்டு வ‌ர்க்க‌ங்க‌ளும் ம‌ன்ன‌ராட்சியோடு முர‌ண்ப‌ட்டு ம‌ன்ன‌ராட்சி முறையை ஒழித்துக் க‌ட்டிவிச்சு ம‌க்க‌ளாட்சி முறை நிலைபெற‌வேண்டும் என்ற‌ நோக்க‌த்திற்காக‌ செய‌ல்ப‌ட்ட‌ன‌. த‌ங்க‌ளுடைய‌ உழைப்புச் ச‌க்திக்குறிய‌ ப‌ல‌னைப் பெறுவ‌தற்காக‌ உரிமைக‌ளை கோருவ‌த்ற்காக‌ தொழிலாள‌ர்க‌ள் தொழிற்ச‌ங்க‌ங்க‌ளை அமைத்துக் கொண்டன‌ர். ம‌ன்ன‌ர்க‌ளுக்கும் முத‌லாளி வ‌ர்க்க‌த்தும் இடையில் ந‌டைபெற்ற போராட்ட‌த்தில் தொழிலாளி வர்க்க‌ம் முத‌லாளி வ‌ர்க்க‌த்தை ஆத‌ரித்த‌து.
1789 இல் ந‌டைபெற்ற‌ பிரெஞ்சு புர‌ட்சி ம‌ன்ன‌ராட்சியையும் நில‌ உடைமையையும் எதிர்த்து முத‌லாளி வ‌ர்க்க‌த்தின் த‌லைமையில்
நடைபெற்ற முதல் புரட்சியாகக் குறிப்பிடப்படுகின்றது. முதலாளி வர்க்கம் தன் சொந்த நலனுக்காகவே உரிமைக்கோரி போராடிப் பெற்றது. அதே போன்று தொழிலாளிகள் தங்களுக்கான உரிமையை கேட்ட போது முதலாளி வர்க்கம் அவற்றை மறுத்தது. இதனால் விழிப்படைந்த தொழிலாளி வர்க்கம் தனக்கென்று தனி தத்துவம், அரசியல் அமைப்புகள் தேவை என்பதை உணர்ந்து அவற்றை உருவாகிக் கொள்ளத் தொடங்கியது. இருந்த போதிலும் தொழிலாளி வர்க்கம் தங்களுக்கென்று சரியான தெளிவான தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. தொழிலாளி வக்கம் அதுவரை சந்தித்து வந்த சிக்கல் களுக்கு விடை காணும் வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த காரல் மார்க்ஸ்(1818 1883), பிரடெரிக் எங்கல்ஸ் (1820 1895) ஆகியோர் தொழிலாளி வர்க்க அரசியலுக்கு அறிவியல் அடிப்படையிலான தத்துவத்தை உருவாக்கி அளித்தனர். இதுவே மார்க்சியம் எனப்பட்டது.

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள்....தொடருங்கள்...அப்படியே
    பொருள் முதல் வாதத்தையும் விவரியுங்கள்...

    தோழமையுடன்
    யுவன்பிரபாகரன்

    பதிலளிநீக்கு