தத்துவ இயல் நான்கு வகையாக பிரிக்கலாம்.
1. அளவையியல்
அளவையில் என்பது ஐம்புலககாட்சிகளால் செய்திகளை திரட்டியும் பகுத்தும் தொகுத்தும் சிந்தித்தும் ஏற்புடைய சிந்தனை முறைகளை எடுத்துச் செல்வது அளவையியல் ஆகும். மனித சிந்தனை வெளிப்பாடுகளில் நிகழக்கூடிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நீக்குவது அளவையியல் பணியாகும். அளவையியல் முறைகளைக் கொண்டு இயற்கை ஆராய்வதால் ஏற்படுகின்ற முடிவுகளின் தொகுப்போ பல்வேறு அறிவியல்களாக மலர்கின்றன.
2. அழகியல்
உண்மையான அழகு, இலட்சிய அழகு, மாறாத் அழகு எதுவென் ஆராய்வது அழகியல் ஆகும். அழகியல் கருத்துக்களின் அடிப்படையில் எழுவதே இலக்கியம், ஓவியம் போன்ற நுண்கலைகள் ஆகும். உள்ளத்து உணர்வுகளை மதிப்பீடு செய்வது அழகியலின் பணியாகும்.
3. அறவியல்
மனிதனின் செயல்களை நன்று தீது சரி தவறு என்று மதிப்பீடு செய்வது அறவியல் ஆகும். மனிதனது பெரும்பாலான யெல்கள் அறவியல் கருப்பொருஅலாக இருப்பதால் த்துவத்தின் பெரும்பகுதி அறவியல் என்று கூறலாம். சமய, சமூக பொருளாதார அரவியல் செயல்கள் அனைத்தும் அறவியல் கோட்பாடுகளின் மதிப்பீட்டிற்கு உட்பட்டவை ஆகும்.
நன்னெறி
நன்னெறி என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது சரியான நடத்தையையும், நல் வாழ்வையும் உள்ளடக்கியது. சரி, பிழை என்பவற்றின் பகுத்தாய்வு பொதுவாகக் கருதப்படுவதிலும் குறிப்பிடத்தக்க அளவு விரிவானதாகும். நன்னெறியின் முக்கியமான அம்சம் "நல்ல வாழ்வு" ஆகும். பயனுள்ளதும், திருப்தி அளிப்பதுமான வாழ்வே முக்கியமானது எனபதே பல மெய்யியலாளரது கருத்தாகும்.
நவீனம் (Modernity) என்பது ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் ஒரு வாழ்க்கைமுறை என்றே கூறலாம். நவீனம் ஒரு கண்ணோட்டமாக, அணுகுமுறையாக கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஐரோப்பாவில் நிலவிய அறிவொளிக் காலத்தில் (Enlightenment era) எழுந்தது.
4. நுண்பொருள் இயல்
தத்துவத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. அளவையியல் அழகியல் , அறவியல் என்பன மனித அனுபவத்திற்கு உட்பட்ட செயல்பாடுகளையும் பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து மதிப்பீடு செய்கின்றன. ஆனால் நுண்பொருளில் பொதுவாகப் புலனனுபவத்திற்கு அப்பாற்பட்டவற்றையே கருப்பொருளாக கொண்டுள்ளது. புலனுபத்திற்கு வராத பிரச்சனைக்களூம் உண்டு. இவ்வியலின் கருப்பொருளாக உயிர், உயிரின் தொடக்கம் முடிவு மறு உலகம் மறுபிறவி, கடவுள், வீடுபேறு, விதி போன்ற கருத்துக்கள் திகழ்கின்றன.
1. அளவையியல்
அளவையில் என்பது ஐம்புலககாட்சிகளால் செய்திகளை திரட்டியும் பகுத்தும் தொகுத்தும் சிந்தித்தும் ஏற்புடைய சிந்தனை முறைகளை எடுத்துச் செல்வது அளவையியல் ஆகும். மனித சிந்தனை வெளிப்பாடுகளில் நிகழக்கூடிய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி நீக்குவது அளவையியல் பணியாகும். அளவையியல் முறைகளைக் கொண்டு இயற்கை ஆராய்வதால் ஏற்படுகின்ற முடிவுகளின் தொகுப்போ பல்வேறு அறிவியல்களாக மலர்கின்றன.
2. அழகியல்
உண்மையான அழகு, இலட்சிய அழகு, மாறாத் அழகு எதுவென் ஆராய்வது அழகியல் ஆகும். அழகியல் கருத்துக்களின் அடிப்படையில் எழுவதே இலக்கியம், ஓவியம் போன்ற நுண்கலைகள் ஆகும். உள்ளத்து உணர்வுகளை மதிப்பீடு செய்வது அழகியலின் பணியாகும்.
3. அறவியல்
மனிதனின் செயல்களை நன்று தீது சரி தவறு என்று மதிப்பீடு செய்வது அறவியல் ஆகும். மனிதனது பெரும்பாலான யெல்கள் அறவியல் கருப்பொருஅலாக இருப்பதால் த்துவத்தின் பெரும்பகுதி அறவியல் என்று கூறலாம். சமய, சமூக பொருளாதார அரவியல் செயல்கள் அனைத்தும் அறவியல் கோட்பாடுகளின் மதிப்பீட்டிற்கு உட்பட்டவை ஆகும்.
நன்னெறி
நன்னெறி என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது சரியான நடத்தையையும், நல் வாழ்வையும் உள்ளடக்கியது. சரி, பிழை என்பவற்றின் பகுத்தாய்வு பொதுவாகக் கருதப்படுவதிலும் குறிப்பிடத்தக்க அளவு விரிவானதாகும். நன்னெறியின் முக்கியமான அம்சம் "நல்ல வாழ்வு" ஆகும். பயனுள்ளதும், திருப்தி அளிப்பதுமான வாழ்வே முக்கியமானது எனபதே பல மெய்யியலாளரது கருத்தாகும்.
நவீனம் (Modernity) என்பது ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் ஒரு வாழ்க்கைமுறை என்றே கூறலாம். நவீனம் ஒரு கண்ணோட்டமாக, அணுகுமுறையாக கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஐரோப்பாவில் நிலவிய அறிவொளிக் காலத்தில் (Enlightenment era) எழுந்தது.
4. நுண்பொருள் இயல்
தத்துவத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டது. அளவையியல் அழகியல் , அறவியல் என்பன மனித அனுபவத்திற்கு உட்பட்ட செயல்பாடுகளையும் பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் ஆராய்ந்து மதிப்பீடு செய்கின்றன. ஆனால் நுண்பொருளில் பொதுவாகப் புலனனுபவத்திற்கு அப்பாற்பட்டவற்றையே கருப்பொருளாக கொண்டுள்ளது. புலனுபத்திற்கு வராத பிரச்சனைக்களூம் உண்டு. இவ்வியலின் கருப்பொருளாக உயிர், உயிரின் தொடக்கம் முடிவு மறு உலகம் மறுபிறவி, கடவுள், வீடுபேறு, விதி போன்ற கருத்துக்கள் திகழ்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக