சாதியம் இன்னமும் இருக்கிறதா என்று எனது நண்பர் அடிக்கடி வினவுவார். சாதியம் கருத்தியல் தளத்தில் இன்னமும் வேரூன்றியுள்ளது என்பது பலரும் ஏற்றுக்கொள்வர். ஆனால் பொருளாதார தளத்தில் முதலாளித்துவ வளர்ச்சியை ஒட்டி சாதியின் அடிப்படைத் தகர்ந்துவிட்டது என்றும் சாதிய முரண்பாடு வர்க்க முரண்பாடாக மாறிவிட்டது என்றும் கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சாதியம் இன்றும் தனது பொருளாதார அடிப்படையைக் கொண்டிருப்பதற்கு நிறைய சான்றுகள் காட்டி நிரூபிக்கலாம்.
சாதிய படிநிலை அமைப்பில் உச்சத்தில் இருக்கும் பார்ப்பணீய சாதி வர்க்க நிலையில் ஆளும்வர்க்க நிலையை கொண்டிருப்பது போன்று மிக அடிமட்டத்தில் இருக்கும் தலித்துகள் வர்க்க நிலையில் உழைக்கின்ற மக்களாக இருந்து வருகின்றனர். இடைப்பட்ட சாதிகளில் சிலவற்றில் ஒரு சிறு பிரிவினர் ஆளும் வர்க்க நிலையை எய்தியுள்ள போதிலும் பெரும்பாண்மையினர் பொருளாதார நிலையிலேயோ அல்லது அரசியல் துறையிலேயோ பெரிய மாற்றங்களை எதையும் அடைந்தவர்களாக இல்லை என்பதே உண்மை.
சாதிய படிநிலை அமைப்பில் உச்சத்தில் இருக்கும் பார்ப்பணீய சாதி வர்க்க நிலையில் ஆளும்வர்க்க நிலையை கொண்டிருப்பது போன்று மிக அடிமட்டத்தில் இருக்கும் தலித்துகள் வர்க்க நிலையில் உழைக்கின்ற மக்களாக இருந்து வருகின்றனர். இடைப்பட்ட சாதிகளில் சிலவற்றில் ஒரு சிறு பிரிவினர் ஆளும் வர்க்க நிலையை எய்தியுள்ள போதிலும் பெரும்பாண்மையினர் பொருளாதார நிலையிலேயோ அல்லது அரசியல் துறையிலேயோ பெரிய மாற்றங்களை எதையும் அடைந்தவர்களாக இல்லை என்பதே உண்மை.
நிலபிரபுத்துவத்தில் போலல்லாமல், முதலாளித்துவ வளர்ச்சி, சாதியக் கட்டமைப்பில் சில நெகிழ்வு தன்மையை உருவாக்க முடிந்தது என்பது உண்மைதான். ஆனால் சாதியத்தின் அடிப்படையை அதனால் தகர்த்தெரிய முடியவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிக்கு இத்தகைய சாதிய படிமுறை ஒருவேளை ஏதுவாக அமைந்திருக்கலாம். இடைப்பட்ட சாதியினரிடமிருந்து முதலாளித்துவத்திற்கு புதிய அணிசேர்க்கை உருவாயிருக்கும் அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள தலித்துகள் கூலி உழைப்புக்கு தாராளமாக கிடைப்பது அதற்கு பெரிய சாதகமான அம்சமாகும். இடஒதுக்கீட்டால் ‘நல்வாய்ப்பு’ கிடைக்கப்பெற்ற படிநிலை சாதியினர் உடனடியான 'அரசியல் விழிப்புணர்வு' பெற்றாலும், அதன் இறுதி விளைவு அனைத்து சாதிபிரிவினர்களிடமிருந்து உருவான படிநிலை அதிகாரவர்க்கம்தான்.
தனது வாழ்க்கைப் பிழைப்புக்காக ஒரு கூலித்தொழிலாளியாகவோ அல்லது உதிரித்தொழிலாளியாகவோ ஈடுபடுத்தப்படும் ஒரு தலித், இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியில் கூலி உழைப்பு என்ற ஒரு கண்ணியோடு மட்டுமே இணைக்கப்படுகிறார். ஆனால் சாதியத்தின் இதர சங்கிலிகளால் இன்னமும் பிணைக்கப்பட்டவராகத்தான் இருக்கிறார்.
இன்றைய முதலாளித்துவ வளர்ச்சியில் சமூகத்தின் உண்மை நிலை என்ன? இன்னமும் நகரத்திலும் கிராமத்திலும் கூலி உழைப்பை நம்பி வாழ்க்கை நடத்தும் பெரும்பான்மையினர் தலித்துகள் தானே? அவர்கள் வாழும் இடம் ஒரு குப்பமோ அல்லது குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் தானே? விலங்குகளும் வாழ தகுதியற்ற பகுதிகளில்தானே அவர்கள் வாழ்க்கையைத் தள்ளவேண்டியிருக்கிறது. அரசு இயந்திர கட்டமைப்பிலும் அடிப்படை ஊழியர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களில் பெரும்பான்மையினர் தலித்துகள் தானே? இடைப்பட்ட சாதிகளில் இருந்து வந்தவர்கள் பெரும்பான்மையினர் அதிகார வர்க்கத்திற்கு சேவை செய்ய தயாரிக்கப்பட்டவர்கள் தானே?
படிநிலை சாதியக் கட்டமைப்பைத் தன்னுள் கருகொண்ட நிலபிரபுத்துவ அமைப்பானது முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டத்தில் மேலும் சிக்கலானதும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்குமே யன்றி நிச்சயமாக சாதிய சிக்கல்களைக் கணக்குதீர்த்த வர்க்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட எளிய சமூகக் கட்டமைப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. வரலாற்றின் வளர்ச்சிப்போக்கில் இன்றைய சாதியக் கட்டமைப்பில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் மேலும் சிக்கலானத் தன்மைக்குத்தான் இட்டுச் செல்லும் என்பது தர்க்க ரீதியிலான முடிவும் கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக