பெளத்த இயங்கியல்
சார்வாகம் என்பது பொருளின் உண்மைநிலையைப் பற்றிப் பேசியது. உபநிடதம் போன்றவை பொருளின் இன்மைநிலையைப் பற்றிப் பேசின. பிரம்மம் என்பது நிலையானதும் முரணற்றதும் மாற்றமில்லாததுமாகும். ஆனால் இவை இரண்டும் இயக்கத்தைப் பற்றியும் மாற்றத்தைப் பற்றியும் பேசவில்லை. இயக்கம் பற்றியும், மாற்றம் பற்றியும் பேசிய இந்திய தத்துவங்களில் பெளத்தம் முதன்மையானது.
பெளத்தத்தின் இருவித போக்குகளை எதிர்கொண்டன. ஒன்றாவது சார்வாகம் என்ற பொருள்முதல்வாதம். இரண்டாவது பிரம்மவாதம் என்ற கருத்துமுதல்வாதம். இரண்டையும் சார்ந்திராமல் நடுநிலை வகிக்கவேண்டும் என்ற நிலைதான் பெளத்தத்திற்கு இருந்தது என்று சொல்லவேண்டும். அதை மத்யமார்க்கம் என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது நிலையான பொருளையும் மறுக்கின்றது. அதேபோல் ஆத்மாவையும் மறுக்கின்றது; இவ்விரண்டையும் இடைவிடாத மாற்றத்தின் ஊடாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
அகம் என்பது மாறாத உள்பொருளா? புலனுணர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவை சேர்ந்ததுதான் அகமா? இவை அனைத்தும் அகத்திலிருந்து வேறுபட்டதா? ஆத்மா குறித்த உபநிடத கருத்தை எதிர்கொண்டார். ஆத்மா குறித்த பெளத்தரின் கருத்து ஆழ சிந்திக்கத்தக்கது.
புத்தர் நிலையற்ற புலனுணர்ச்சிகளையும் எண்ணங்களையும் மட்டுமே ஒப்புக் கொண்டார். அகம் என்பதைத் தேவையற்ற முற்கோளென மறுத்தார். அதாவது அவர் உணர்வின் பலநிலைகளை மட்டும் ஏற்றுக் கொண்டாரேயன்றி, உளத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கருத்துப்படி, புலனுணர்ச்சிகளும் எண்ணங்களும் அவற்றுடன் இணைக்கப்பெற்றுள்ள பெளதிக அமைப்பும் சேர்ந்தவகையில் தாமே அகம் ஆகின்றன. இதன்மூலம் அகம் என்று ஏதுமில்லை. இந்த அடிப்படியில்தான் ஆத்மா என்ற கருத்தை புத்தர் மறுக்கிறார்.
சடப்பொருள் குறித்து பெளத்தத்தின் விளக்கத்தைக் காண்போம். பொருள் என்பது குண இயல்புகளின் தொகுப்பா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது பெளத்தம். எந்த ஒரு பொருளை எடுத்து ஆராயத் தொடங்கினாலும் அதன் குண இயல்புகளின் சேர்க்கையே தவிர அவ்வியல்புகளை உடைய பொருள் எதுவும் இல்லை; மேசை கடினமுடையது. சதுர வடிவமுடையது. மாநிற முடையது என்று கூறுவது தவறு. கடினம், சதுரம், மாநிறம் ஆகியவற்றைத் தனித்தனி பிரித்தெடுத்து விட்டால் மேசையென்ற பொருள் எதுவும் இல்லை எனபதுதான் பெளத்தத்தின் முடிவாகும்.
அவ்வியல்புகள் இல்லாமல், மேசை என்று ஒன்று இல்லை. எனவே மேசை என்ற பொருள் அவ்வியல்புகளை உடையது எனக் கூறுவது பொருத்தமற்றது. எனவே குண இயல்புகளின் தொகுப்பையே நாம் உயிர் என்றும் உடல் என்றும் குறிக்கின்றொம். இவற்றையே பௌத்தர் நாமரூபம் என வழங்குகிறார்.
புறத்திலிருந்து புலனுணர்ச்சிகள் பெறப்படும்போது அவை புறத்திலுள்ள அப்பொருளின் பண்புகளை அறியச் செய்கின்றன. அப்பண்புகளையே அல்லது அப்புலன்வழி கிடைத்தவற்றையே பொருள் என்று புத்தர் கருதியதுடன் அவற்றிற்கு அப்பாற்பட்டதாகத் தன்னில் நிலைத்திருக்கும் பொருள் உண்டென்பதை மறுத்தார். அதற்கு புத்தர் கூறும் காரணம் பொருளின் பண்புகளை நாம் அறிவதற்கு வழிகள் இருக்கின்றன; ஆனால் பொருளை அறிவதற்கு வழி ஏதும் இல்லை என்பதாகும். இங்கு வழிகள் புலன்களைக் குறிப்பதாகும். மனிதனின் புலன் வழி பொருளின் பண்புகளை மட்டுமே உணரமுடியும் என்பது புத்தரது கருத்தாகும்.
பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த இலக்கியத்தில் பல உருவகக் கதைகள் சொல்லப்படுகின்றன. பிரசித்திபெற்ற அக்கதைகளுள் குறிப்பிடதக்கது தேரைப் பற்றிய கதையாகும். இது ஆன்மா குறித்து நடைபெற்ற முக்கிய உரையாடல் ஆகும். இவ்வுரையாடல் மிலிண்ட மன்னருக்கும் நாகசேனர் என்ற பெளத்த அறிஞருக்கும் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. ஆன்மா இல்லை என்ற நாகசேனரின் வாதத்தை அவர் ஏற்க இயலவில்லை. அப்போது அவர், மேன்மை மிக்க மன்னரே, தாங்கள் நடந்து வந்தீர்களா அல்லது தேரில் வந்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு மன்னர், ஐயனே நான் நடந்து வரவில்லை, தேரில் தான் வந்தேன் என்றார். மேன்மை மிக்க மன்னரே, அவ்வாறு வந்தால் தேர் என்பது எது? கம்பத்தைத் தேர் என்போமா? உருளைகளைத் தேர் என்போமா? என அவர் வினவினார். உருளைகளின் அச்சையும் பிறற்றையும் பற்றி அத்தகைய வினாக்கள் கேட்கப் பட்டபோது மன்னர், தேரின் பகுதியாயுள்ள எதுவும் தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது தேர் ஆகாது என்பதையும் அச்சொல் அப்பகுதிகளை 'ஒன்றாகப் பொருத்தப்பட்டிருப்பதை' அல்லது குறித்தவகையில் அமைக்கப்பட்டிருப்பதை உணர்த்துவதாகவே உளது என்பதையும் காணமுடிந்தது. பிறகு அவ்வறிஞர் அவ்வ்வாறே ஆதமா என்னும் சொல்லும் உடலியல் உள இயல்பானகூறுகள் சிலவற்றின் தொகுப்பைக் குறிப்பிடும் வெறும் பெயர்க் குறிப்புச் சீட்டைப் போன்றதே என்று மேலும் கூறினார்.
இவ்வாறு ஆத்மாவுக்கும் சடவுலகிற்கும் அளிக்கப்படுள்ள விளக்கம் ஒரே அணுகுமுறையையும் அடிப்படையையும் கொண்டது என்பதை இங்கு நாம் முதன்மையாக நினைவில் இருத்த வேண்டியதாகும்.
மாற்றம் என்பது என்ன? மாற்றம் எவ்வாறு நிகழ்கின்றது என்பதை ஆய்ந்து சிந்தித்தவர் புத்தர். மாற்றம் என்பது ஒவ்வொரு பொருளிலும் உள்ளும் புறமும், மேலும் கீழும், அணு அணுவாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கணமும் அதே போன்ற இன்னொன்றாகவோ அல்லது அதனின்று வேறுபட்ட ஒன்றாகவோ மாறியபடியே இருக்கின்றது. மாறுமுன் இருந்த பொருள், மாறிய பின்னும் இருக்காது. மாறுமுன் இருந்ததும் மாறியபின் இருப்பதும் ஒன்றே போல இருப்பதால், நாம் அவை இரண்டையும் ஒரே பொருள் என கூறமுடியாது.
மாற்றம் சிறிய அளவில் நிகழும்போது அது நமக்குப் புலப்படுவதில்லை. அது பெரிய அளவில் நடக்கும் போதுதான் நம்மால் அம்மாற்றத்தை உணரமுடிகிறது. ஒரு பொருள் அது போன்ற இன்னொன்றாக மாறும்போது மாற்றம் நமக்குப் புலனாகின்றது. ஒரு கணத்தில் உள்ள காய் மறுகணத்தில் அதே போன்ற இன்னொரு காயாக மாறியபோதும் இரு கணத்தில் உள்ளதும் ஒரே காய் என நாம் கருதுகிறோம். காய் பழமாக மாறியபின்தான் மாற்றம் புலனாகின்றது.
புத்தரின் கொள்கைப்படி மாறுதல் என்றால் அழிதல் அல்லது நீங்குதல் என்பதே யாகும். மாற்றம் என்பது ஒரு பொருள் அழிந்து, அதனிடத்தில் இன்னொன்று தோன்றுவது. எனவே, ஒரு பொருள் இன்னொன்றாக மாறிய பின்னும் முதல் இருந்த பொருளே நிலைத்து நிற்கின்றது எனக் கொள்வது தவறு. முன்னிருந்த அதே பொருள்தான் பின்னும் இருக்கிறது எனின், மாற்றம் நிகழவில்லை என்றாகும். மாற்றம் நிகழ்ந்தது எனின், முன் இருந்தது அழிந்து வேறு ஒன்று தோன்றியது என்றாகும். எந்த ஒரு பொருளும் தொடர்ந்து இரு கணங்கூட நிலைப்பதில்லை. தோன்றிய அக்கணமே அது தன் போன்ற இன்னொன்றைத் தோற்றுவித்துவிட்டு மறைந்துவிடுகின்றது. மாறும் பொருள் எதுவுமின்றி மாற்றம் மட்டுமே நிகழ்கின்றது
ஒன்று மறைய, அதனிடத்தில் அதே போன்ற இன்னொன்று தோன்றுவதுதான் மாற்றம் எனப்படுவதாயின். மாறிய பொருள் மாறிய பின்னும் நிலைக்கின்றது என்பது, அழிந்த பொருள் அழிந்த பின்னும் இருக்கின்றது என்பது போன்றது. ஒரு கணத்துக்கு மேல் நிலைத்து நிற்பது எனப் பேசத்தக்க பொருள் எதுவும் இல்லை. எனவே, மாறும் பொருள் எனப் பேச எதுவும் இல்லை. மாற்றம் ஒன்றுதான் உண்மை. அதுதான தொடர்ச்சியாய் இடையறாது நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. ஒன்று அழிகின்றது; இன்னொன்று தோன்றுகின்றது. ஒரு பொருளும் கணங்கூட நிலைப்பதில்லை. எனவே, பொருள் என ஒன்றும் இல்லை. மாற்றந்தான் உள்ளது. நிலைபேறு என்பது பொய். மாற்றம் என்பதுதான் மெய். இதுதான் புத்தர் கண்ட மகத்தான முடிவு.
பெளத்தக் கூற்றின் படி ஆன்மாவும் சடவுலகமும் இரு நொடிகள் கூட ஒரே நிலையில் நீடித்திராமல் இடைவிடாது மாறிக்கொண்டே இருக்கின்றன. இரண்டுமே தொடர்ச்சியான மாறுதல் நிலையில் உள்ளன. இக்கருத்தை நன்றாக விளக்கும்பொருட்டு இரண்டு சான்றுகள் பகரப்படுகின்றன. ஒன்று, நீரோட்டம், இரண்டு, தானே தோன்றுவதும் தன்னையே அழித்துக் கொள்வதுமான தீக்கொழுந்து ஆகியன.எல்லா பொருட்களும் தம் அடிப்படையில் நிலைத்திராமல் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இக்கொள்கை அக்காலத்தில் இருந்த உண்மை மற்றும் இன்மை என்ற மாறுபட்ட கொள்கைகளை இணக்கமுறச் செய்வதாக உள்ளது. பெளத்தக் கொள்கைப்படி, உண்மையோ இன்மையோ மெய்யாகாது மாறுகின்ற நிலை மட்டுமே மெய்யாகும். இதிலிருந்து அவர் உள்பொருளை மறுத்தார் என நாம் முடிவு செய்யலாகாது. அவர் அதைத் திண்ணமாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு இயக்கப் போக்கான விளக்கம் அளித்தார்.
பெளத்தம், ஆத்மாவையும் சடப்பொருளையும் கால ஓட்டத்தில் வைத்துப் பார்த்தது. சடப்பொருளின் இருப்பை அதன் மாற்றத்தின் இயக்கப்போக்கில் வைத்துப் பார்த்தது. இயக்கத்திற்கு அப்பால் மாற்றம் என்ற நிகழ்ச்சிப் போக்கிற்கு அப்பால் பொருள் என்பதன் இருப்பை பெளத்தம் மறுக்கின்றது.
நிலைபேறும், மாற்றமும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை. இரண்டும் உண்மையாய் இருக்க முடியாது. நிலைபேறு உண்மையானால் மாற்றம் என்பது இல்லை என்றாகும். மாற்றம் உண்மையானால் நிலைபேறு என்பது இல்லை என்றாகும். இந்த இரண்டில் எது உண்மை? மாற்றமும் நிலைபேறும் ஆகிய நேர்மாறான இரண்டும் உண்மையாயிருக்க முடியாது. அவற்றுள் ஒன்றுதான் உண்மையாதல் கூடும். மாற்றத்தான் உண்மை, நிலைபேறு பொய் என்பது புத்தரின் முடிவு.
வேதாந்திகள் கொள்கை இதற்கு நேர் மாறானது. மாற்றம் பொய். நிலைபேறுதான் உண்மை. உண்மை போலக் காணப்படும் இம்மாற்றங்களுக்கு அடியில், இம்மாற்றங்களால் பாதிக்கப்படாத நிலையான பொருள் உண்டு அதுவே பரமாத்மா. அது மாறுவதாகக் காணப்படுவதுதான் மாயை என்கின்றது வேதாந்தம்.
இந்த இரு தீவிர நிலைகளக்கும நடுவிலுள்ள ஒரு நிலையாகச் சமணம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றைக் கொள்ளலாம். அவை, மாற்றம் நிலைபேறு இரண்டும் உள்ளவை என்பன.
காய் கனியான பின், அக்காயே கனியானது. இரண்டும் ஒன்றுதான். காய் இன்னும் உள்ளது. காயான ஒரே பொருள்தான், கனியாயும் நிலைத்திருக்கின்றது எனின் மாற்றம் நிகழவில்லை. மாற்றம் நிகழ்ந்தது என்பது பொய் என்றாகும். மாற்றம் நிகழ்ந்தது உண்மையாயின் நிலைபேறு என்பது பொய். நிலைபேறோ, நிலைபேற்றுக்கு நிலைக்களனான பொருளோ கிடையாது என்பதே புத்தரின் முடிவு.
பொருள்கள் மாற்றம் அடைகின்றன, அழிகின்றன என்று சொல்லும்போது உண்மையில் என்ன நிகழ்கின்றது என்பதை ஆழ்ந்து சிந்தித்தார் புத்தர் பெருமான். அந்த ஆழ்ந்த சிந்தனையின் பயனாகப் பொருள்களே இல்லை மாற்றம் மட்டுமே உள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்தார். இதுவே பௌத்த மதத்திற்கு ஆணிவேர் போன்றது.
மாற்றத்தின் போது பொருளில் சில பகுதிகளில் மட்டும் நிகழுகின்றதா அல்லது பொருள் முழுதுமே மாறுகின்றதா? என்று மாற்றத்தின் அடிப்படைகளை பற்றிய ஆராய்ச்சிதான் பௌத்தத்தின் உயிர்நாடி. மாற்றம் என்பது பொருளின் பகுதியில் மட்டும் நிகழ்வதாகாது. அது பொருள் முழுவதையும் பற்றியது என்ற முடிவுக்குப் பௌத்தர் வந்தார். மாற்றம் பொருள் முழுவதிலும் நிகழ்வது மட்டும் அல்ல; அது ஒவ்வொரு கணமும் இடையறாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதுமாகும்.
பௌத்தர் கொள்கைப்படி ஒரு பொருள் உண்டு என்றால், அது ஒரு செயலைச் செய்ய வேண்டும். செயல் நிகழ்வதுதான் பொருள் இருக்கின்றது என்பதற்கு அறிகுறி. செயல் இல்லையேல் பொருளும் இல்லை. இங்குச் செயலைச் செய்வது என்பது, தான் காரணமாய் நின்று, தன் மூலம் ஒரு காரியத்தை ஆக்குவது. காரியம் ஆகவில்லையானால் காரணமும் இல்லை. ஒரு பொருள் இருக்கிறது என்பதற்குப் பௌத்தர் கொள்ளும் வரைவிலக்கணம் அது காரியத்தை ஆக்குவதாய் இருத்தல் வேண்டும் என்பதே.
விதை உள்ளது என்றால், அது உடனே முளையை உற்பத்தி செய்யவேண்டும். அவ்விதை காரணமாய் அதிலிருந்து ஒரு காரியம் உடனே தோன்ற வேண்டும். தோன்றவில்லையாயின் காரணம் என்ற பொருளாகிய விதையும் இல்லை. மூளையைத் தோற்றுவிக்கும் சக்தி விதையில் இருக்கின்றது; அச்சக்தி இப்போது மறைந்து கிடக்கின்றது. சில நாள் கழித்துத்தான் அது தொழிற்படும் என்பதைப் பௌத்தர் ஒப்புக்கொள்ளார். இதன் பொருட்டே விதை, முளையாகிய காரியத்தைத் தோற்றுவிக்குமுன் தன் போன்ற பிறிதொரு விதையைத் தோற்றுவித்துவிட்டுத் தான் மாய்ந்துவிடுகின்றது.
ஓடும் நீரில் ஒரே இடத்தில் நாம் இருமுறை குளிக்கமுடியாது; காலைத் தூக்கி, மறுமுறை நீருக்குக் கொண்டு போவதற்கிடையில், முதலிருந்த நீர் போய், வேறு நீர் அவ்விடத்துக்கு வந்துவிடும்; அதேபோலத்தான் வைக்கப்படும் நமது பாதமும். மேலே தூக்கிப் பாதம் மீண்டும் நீரில் வைக்கப்படுவதற்குள் மாறி வேறு ஒரு பாதமாகி விடும்; இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஓட்டத்தாலும் மாற்றத்தாலும் ஆனதே இப்பிரபஞ்சம்; இதன் கண்ணுள்ள சேதன அசேதனப் பொருள்கள் அனைத்திலும் இயக்கம் நிகழுகின்றது; ஆனால் மாற்றம் நிகழுகின்றது; மாறும் பொருள் கிடையாது; செயல் நிகழ்கின்றது; செய்வோன் இலன. இவ்வாறான விளக்கத்தைத் தான் பெளத்தம் கூறுகின்றது.
அன்று பெளத்தம் எழுப்பிய தத்துவ கேள்விகளும் பிரச்சனைகளும், இன்றளவும் அறிவியல் மற்றும் தத்துவ துறைகளில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடதக்கதாகும்.
ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த பிரபல கிரேக்க தத்துவ ஞானியாகிய ஹெராகிளிட்டசு என்பவர் மாற்றம் குறித்த அதே அணுகுமுறையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இயக்கம் பற்றியும் மாற்றங்கள் பற்றியும் அதன் பல்வேறு பரிணாமங்கள் குறித்தும் முதன்முதலில் விளக்கி கூறியவர் புத்தர் பெருமானே யாவார். இந்திய இயங்கியலின் தந்தை புத்தர் என்றே சொல்லவேண்டும்.
சார்வாகம் என்பது பொருளின் உண்மைநிலையைப் பற்றிப் பேசியது. உபநிடதம் போன்றவை பொருளின் இன்மைநிலையைப் பற்றிப் பேசின. பிரம்மம் என்பது நிலையானதும் முரணற்றதும் மாற்றமில்லாததுமாகும். ஆனால் இவை இரண்டும் இயக்கத்தைப் பற்றியும் மாற்றத்தைப் பற்றியும் பேசவில்லை. இயக்கம் பற்றியும், மாற்றம் பற்றியும் பேசிய இந்திய தத்துவங்களில் பெளத்தம் முதன்மையானது.
பெளத்தத்தின் இருவித போக்குகளை எதிர்கொண்டன. ஒன்றாவது சார்வாகம் என்ற பொருள்முதல்வாதம். இரண்டாவது பிரம்மவாதம் என்ற கருத்துமுதல்வாதம். இரண்டையும் சார்ந்திராமல் நடுநிலை வகிக்கவேண்டும் என்ற நிலைதான் பெளத்தத்திற்கு இருந்தது என்று சொல்லவேண்டும். அதை மத்யமார்க்கம் என்று குறிப்பிடுவதுண்டு. அதாவது நிலையான பொருளையும் மறுக்கின்றது. அதேபோல் ஆத்மாவையும் மறுக்கின்றது; இவ்விரண்டையும் இடைவிடாத மாற்றத்தின் ஊடாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
அகம் என்பது மாறாத உள்பொருளா? புலனுணர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவை சேர்ந்ததுதான் அகமா? இவை அனைத்தும் அகத்திலிருந்து வேறுபட்டதா? ஆத்மா குறித்த உபநிடத கருத்தை எதிர்கொண்டார். ஆத்மா குறித்த பெளத்தரின் கருத்து ஆழ சிந்திக்கத்தக்கது.
புத்தர் நிலையற்ற புலனுணர்ச்சிகளையும் எண்ணங்களையும் மட்டுமே ஒப்புக் கொண்டார். அகம் என்பதைத் தேவையற்ற முற்கோளென மறுத்தார். அதாவது அவர் உணர்வின் பலநிலைகளை மட்டும் ஏற்றுக் கொண்டாரேயன்றி, உளத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கருத்துப்படி, புலனுணர்ச்சிகளும் எண்ணங்களும் அவற்றுடன் இணைக்கப்பெற்றுள்ள பெளதிக அமைப்பும் சேர்ந்தவகையில் தாமே அகம் ஆகின்றன. இதன்மூலம் அகம் என்று ஏதுமில்லை. இந்த அடிப்படியில்தான் ஆத்மா என்ற கருத்தை புத்தர் மறுக்கிறார்.
சடப்பொருள் குறித்து பெளத்தத்தின் விளக்கத்தைக் காண்போம். பொருள் என்பது குண இயல்புகளின் தொகுப்பா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது பெளத்தம். எந்த ஒரு பொருளை எடுத்து ஆராயத் தொடங்கினாலும் அதன் குண இயல்புகளின் சேர்க்கையே தவிர அவ்வியல்புகளை உடைய பொருள் எதுவும் இல்லை; மேசை கடினமுடையது. சதுர வடிவமுடையது. மாநிற முடையது என்று கூறுவது தவறு. கடினம், சதுரம், மாநிறம் ஆகியவற்றைத் தனித்தனி பிரித்தெடுத்து விட்டால் மேசையென்ற பொருள் எதுவும் இல்லை எனபதுதான் பெளத்தத்தின் முடிவாகும்.
அவ்வியல்புகள் இல்லாமல், மேசை என்று ஒன்று இல்லை. எனவே மேசை என்ற பொருள் அவ்வியல்புகளை உடையது எனக் கூறுவது பொருத்தமற்றது. எனவே குண இயல்புகளின் தொகுப்பையே நாம் உயிர் என்றும் உடல் என்றும் குறிக்கின்றொம். இவற்றையே பௌத்தர் நாமரூபம் என வழங்குகிறார்.
புறத்திலிருந்து புலனுணர்ச்சிகள் பெறப்படும்போது அவை புறத்திலுள்ள அப்பொருளின் பண்புகளை அறியச் செய்கின்றன. அப்பண்புகளையே அல்லது அப்புலன்வழி கிடைத்தவற்றையே பொருள் என்று புத்தர் கருதியதுடன் அவற்றிற்கு அப்பாற்பட்டதாகத் தன்னில் நிலைத்திருக்கும் பொருள் உண்டென்பதை மறுத்தார். அதற்கு புத்தர் கூறும் காரணம் பொருளின் பண்புகளை நாம் அறிவதற்கு வழிகள் இருக்கின்றன; ஆனால் பொருளை அறிவதற்கு வழி ஏதும் இல்லை என்பதாகும். இங்கு வழிகள் புலன்களைக் குறிப்பதாகும். மனிதனின் புலன் வழி பொருளின் பண்புகளை மட்டுமே உணரமுடியும் என்பது புத்தரது கருத்தாகும்.
பெளத்தக் கருத்துகளை விளக்கும் பொருட்டு பெளத்த இலக்கியத்தில் பல உருவகக் கதைகள் சொல்லப்படுகின்றன. பிரசித்திபெற்ற அக்கதைகளுள் குறிப்பிடதக்கது தேரைப் பற்றிய கதையாகும். இது ஆன்மா குறித்து நடைபெற்ற முக்கிய உரையாடல் ஆகும். இவ்வுரையாடல் மிலிண்ட மன்னருக்கும் நாகசேனர் என்ற பெளத்த அறிஞருக்கும் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. ஆன்மா இல்லை என்ற நாகசேனரின் வாதத்தை அவர் ஏற்க இயலவில்லை. அப்போது அவர், மேன்மை மிக்க மன்னரே, தாங்கள் நடந்து வந்தீர்களா அல்லது தேரில் வந்தீர்கள் எனக் கேட்டார். அதற்கு மன்னர், ஐயனே நான் நடந்து வரவில்லை, தேரில் தான் வந்தேன் என்றார். மேன்மை மிக்க மன்னரே, அவ்வாறு வந்தால் தேர் என்பது எது? கம்பத்தைத் தேர் என்போமா? உருளைகளைத் தேர் என்போமா? என அவர் வினவினார். உருளைகளின் அச்சையும் பிறற்றையும் பற்றி அத்தகைய வினாக்கள் கேட்கப் பட்டபோது மன்னர், தேரின் பகுதியாயுள்ள எதுவும் தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது தேர் ஆகாது என்பதையும் அச்சொல் அப்பகுதிகளை 'ஒன்றாகப் பொருத்தப்பட்டிருப்பதை' அல்லது குறித்தவகையில் அமைக்கப்பட்டிருப்பதை உணர்த்துவதாகவே உளது என்பதையும் காணமுடிந்தது. பிறகு அவ்வறிஞர் அவ்வ்வாறே ஆதமா என்னும் சொல்லும் உடலியல் உள இயல்பானகூறுகள் சிலவற்றின் தொகுப்பைக் குறிப்பிடும் வெறும் பெயர்க் குறிப்புச் சீட்டைப் போன்றதே என்று மேலும் கூறினார்.
இவ்வாறு ஆத்மாவுக்கும் சடவுலகிற்கும் அளிக்கப்படுள்ள விளக்கம் ஒரே அணுகுமுறையையும் அடிப்படையையும் கொண்டது என்பதை இங்கு நாம் முதன்மையாக நினைவில் இருத்த வேண்டியதாகும்.
மாற்றம் என்பது என்ன? மாற்றம் எவ்வாறு நிகழ்கின்றது என்பதை ஆய்ந்து சிந்தித்தவர் புத்தர். மாற்றம் என்பது ஒவ்வொரு பொருளிலும் உள்ளும் புறமும், மேலும் கீழும், அணு அணுவாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு கணமும் அதே போன்ற இன்னொன்றாகவோ அல்லது அதனின்று வேறுபட்ட ஒன்றாகவோ மாறியபடியே இருக்கின்றது. மாறுமுன் இருந்த பொருள், மாறிய பின்னும் இருக்காது. மாறுமுன் இருந்ததும் மாறியபின் இருப்பதும் ஒன்றே போல இருப்பதால், நாம் அவை இரண்டையும் ஒரே பொருள் என கூறமுடியாது.
மாற்றம் சிறிய அளவில் நிகழும்போது அது நமக்குப் புலப்படுவதில்லை. அது பெரிய அளவில் நடக்கும் போதுதான் நம்மால் அம்மாற்றத்தை உணரமுடிகிறது. ஒரு பொருள் அது போன்ற இன்னொன்றாக மாறும்போது மாற்றம் நமக்குப் புலனாகின்றது. ஒரு கணத்தில் உள்ள காய் மறுகணத்தில் அதே போன்ற இன்னொரு காயாக மாறியபோதும் இரு கணத்தில் உள்ளதும் ஒரே காய் என நாம் கருதுகிறோம். காய் பழமாக மாறியபின்தான் மாற்றம் புலனாகின்றது.
புத்தரின் கொள்கைப்படி மாறுதல் என்றால் அழிதல் அல்லது நீங்குதல் என்பதே யாகும். மாற்றம் என்பது ஒரு பொருள் அழிந்து, அதனிடத்தில் இன்னொன்று தோன்றுவது. எனவே, ஒரு பொருள் இன்னொன்றாக மாறிய பின்னும் முதல் இருந்த பொருளே நிலைத்து நிற்கின்றது எனக் கொள்வது தவறு. முன்னிருந்த அதே பொருள்தான் பின்னும் இருக்கிறது எனின், மாற்றம் நிகழவில்லை என்றாகும். மாற்றம் நிகழ்ந்தது எனின், முன் இருந்தது அழிந்து வேறு ஒன்று தோன்றியது என்றாகும். எந்த ஒரு பொருளும் தொடர்ந்து இரு கணங்கூட நிலைப்பதில்லை. தோன்றிய அக்கணமே அது தன் போன்ற இன்னொன்றைத் தோற்றுவித்துவிட்டு மறைந்துவிடுகின்றது. மாறும் பொருள் எதுவுமின்றி மாற்றம் மட்டுமே நிகழ்கின்றது
ஒன்று மறைய, அதனிடத்தில் அதே போன்ற இன்னொன்று தோன்றுவதுதான் மாற்றம் எனப்படுவதாயின். மாறிய பொருள் மாறிய பின்னும் நிலைக்கின்றது என்பது, அழிந்த பொருள் அழிந்த பின்னும் இருக்கின்றது என்பது போன்றது. ஒரு கணத்துக்கு மேல் நிலைத்து நிற்பது எனப் பேசத்தக்க பொருள் எதுவும் இல்லை. எனவே, மாறும் பொருள் எனப் பேச எதுவும் இல்லை. மாற்றம் ஒன்றுதான் உண்மை. அதுதான தொடர்ச்சியாய் இடையறாது நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. ஒன்று அழிகின்றது; இன்னொன்று தோன்றுகின்றது. ஒரு பொருளும் கணங்கூட நிலைப்பதில்லை. எனவே, பொருள் என ஒன்றும் இல்லை. மாற்றந்தான் உள்ளது. நிலைபேறு என்பது பொய். மாற்றம் என்பதுதான் மெய். இதுதான் புத்தர் கண்ட மகத்தான முடிவு.
பெளத்தக் கூற்றின் படி ஆன்மாவும் சடவுலகமும் இரு நொடிகள் கூட ஒரே நிலையில் நீடித்திராமல் இடைவிடாது மாறிக்கொண்டே இருக்கின்றன. இரண்டுமே தொடர்ச்சியான மாறுதல் நிலையில் உள்ளன. இக்கருத்தை நன்றாக விளக்கும்பொருட்டு இரண்டு சான்றுகள் பகரப்படுகின்றன. ஒன்று, நீரோட்டம், இரண்டு, தானே தோன்றுவதும் தன்னையே அழித்துக் கொள்வதுமான தீக்கொழுந்து ஆகியன.எல்லா பொருட்களும் தம் அடிப்படையில் நிலைத்திராமல் இடைவிடாது இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இக்கொள்கை அக்காலத்தில் இருந்த உண்மை மற்றும் இன்மை என்ற மாறுபட்ட கொள்கைகளை இணக்கமுறச் செய்வதாக உள்ளது. பெளத்தக் கொள்கைப்படி, உண்மையோ இன்மையோ மெய்யாகாது மாறுகின்ற நிலை மட்டுமே மெய்யாகும். இதிலிருந்து அவர் உள்பொருளை மறுத்தார் என நாம் முடிவு செய்யலாகாது. அவர் அதைத் திண்ணமாக ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு இயக்கப் போக்கான விளக்கம் அளித்தார்.
பெளத்தம், ஆத்மாவையும் சடப்பொருளையும் கால ஓட்டத்தில் வைத்துப் பார்த்தது. சடப்பொருளின் இருப்பை அதன் மாற்றத்தின் இயக்கப்போக்கில் வைத்துப் பார்த்தது. இயக்கத்திற்கு அப்பால் மாற்றம் என்ற நிகழ்ச்சிப் போக்கிற்கு அப்பால் பொருள் என்பதன் இருப்பை பெளத்தம் மறுக்கின்றது.
நிலைபேறும், மாற்றமும் ஒன்றுக்கொன்று நேர்மாறானவை. இரண்டும் உண்மையாய் இருக்க முடியாது. நிலைபேறு உண்மையானால் மாற்றம் என்பது இல்லை என்றாகும். மாற்றம் உண்மையானால் நிலைபேறு என்பது இல்லை என்றாகும். இந்த இரண்டில் எது உண்மை? மாற்றமும் நிலைபேறும் ஆகிய நேர்மாறான இரண்டும் உண்மையாயிருக்க முடியாது. அவற்றுள் ஒன்றுதான் உண்மையாதல் கூடும். மாற்றத்தான் உண்மை, நிலைபேறு பொய் என்பது புத்தரின் முடிவு.
வேதாந்திகள் கொள்கை இதற்கு நேர் மாறானது. மாற்றம் பொய். நிலைபேறுதான் உண்மை. உண்மை போலக் காணப்படும் இம்மாற்றங்களுக்கு அடியில், இம்மாற்றங்களால் பாதிக்கப்படாத நிலையான பொருள் உண்டு அதுவே பரமாத்மா. அது மாறுவதாகக் காணப்படுவதுதான் மாயை என்கின்றது வேதாந்தம்.
இந்த இரு தீவிர நிலைகளக்கும நடுவிலுள்ள ஒரு நிலையாகச் சமணம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றைக் கொள்ளலாம். அவை, மாற்றம் நிலைபேறு இரண்டும் உள்ளவை என்பன.
காய் கனியான பின், அக்காயே கனியானது. இரண்டும் ஒன்றுதான். காய் இன்னும் உள்ளது. காயான ஒரே பொருள்தான், கனியாயும் நிலைத்திருக்கின்றது எனின் மாற்றம் நிகழவில்லை. மாற்றம் நிகழ்ந்தது என்பது பொய் என்றாகும். மாற்றம் நிகழ்ந்தது உண்மையாயின் நிலைபேறு என்பது பொய். நிலைபேறோ, நிலைபேற்றுக்கு நிலைக்களனான பொருளோ கிடையாது என்பதே புத்தரின் முடிவு.
பொருள்கள் மாற்றம் அடைகின்றன, அழிகின்றன என்று சொல்லும்போது உண்மையில் என்ன நிகழ்கின்றது என்பதை ஆழ்ந்து சிந்தித்தார் புத்தர் பெருமான். அந்த ஆழ்ந்த சிந்தனையின் பயனாகப் பொருள்களே இல்லை மாற்றம் மட்டுமே உள்ளது என்ற முடிவுக்கு அவர் வந்தார். இதுவே பௌத்த மதத்திற்கு ஆணிவேர் போன்றது.
மாற்றத்தின் போது பொருளில் சில பகுதிகளில் மட்டும் நிகழுகின்றதா அல்லது பொருள் முழுதுமே மாறுகின்றதா? என்று மாற்றத்தின் அடிப்படைகளை பற்றிய ஆராய்ச்சிதான் பௌத்தத்தின் உயிர்நாடி. மாற்றம் என்பது பொருளின் பகுதியில் மட்டும் நிகழ்வதாகாது. அது பொருள் முழுவதையும் பற்றியது என்ற முடிவுக்குப் பௌத்தர் வந்தார். மாற்றம் பொருள் முழுவதிலும் நிகழ்வது மட்டும் அல்ல; அது ஒவ்வொரு கணமும் இடையறாது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதுமாகும்.
பௌத்தர் கொள்கைப்படி ஒரு பொருள் உண்டு என்றால், அது ஒரு செயலைச் செய்ய வேண்டும். செயல் நிகழ்வதுதான் பொருள் இருக்கின்றது என்பதற்கு அறிகுறி. செயல் இல்லையேல் பொருளும் இல்லை. இங்குச் செயலைச் செய்வது என்பது, தான் காரணமாய் நின்று, தன் மூலம் ஒரு காரியத்தை ஆக்குவது. காரியம் ஆகவில்லையானால் காரணமும் இல்லை. ஒரு பொருள் இருக்கிறது என்பதற்குப் பௌத்தர் கொள்ளும் வரைவிலக்கணம் அது காரியத்தை ஆக்குவதாய் இருத்தல் வேண்டும் என்பதே.
விதை உள்ளது என்றால், அது உடனே முளையை உற்பத்தி செய்யவேண்டும். அவ்விதை காரணமாய் அதிலிருந்து ஒரு காரியம் உடனே தோன்ற வேண்டும். தோன்றவில்லையாயின் காரணம் என்ற பொருளாகிய விதையும் இல்லை. மூளையைத் தோற்றுவிக்கும் சக்தி விதையில் இருக்கின்றது; அச்சக்தி இப்போது மறைந்து கிடக்கின்றது. சில நாள் கழித்துத்தான் அது தொழிற்படும் என்பதைப் பௌத்தர் ஒப்புக்கொள்ளார். இதன் பொருட்டே விதை, முளையாகிய காரியத்தைத் தோற்றுவிக்குமுன் தன் போன்ற பிறிதொரு விதையைத் தோற்றுவித்துவிட்டுத் தான் மாய்ந்துவிடுகின்றது.
ஓடும் நீரில் ஒரே இடத்தில் நாம் இருமுறை குளிக்கமுடியாது; காலைத் தூக்கி, மறுமுறை நீருக்குக் கொண்டு போவதற்கிடையில், முதலிருந்த நீர் போய், வேறு நீர் அவ்விடத்துக்கு வந்துவிடும்; அதேபோலத்தான் வைக்கப்படும் நமது பாதமும். மேலே தூக்கிப் பாதம் மீண்டும் நீரில் வைக்கப்படுவதற்குள் மாறி வேறு ஒரு பாதமாகி விடும்; இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஓட்டத்தாலும் மாற்றத்தாலும் ஆனதே இப்பிரபஞ்சம்; இதன் கண்ணுள்ள சேதன அசேதனப் பொருள்கள் அனைத்திலும் இயக்கம் நிகழுகின்றது; ஆனால் மாற்றம் நிகழுகின்றது; மாறும் பொருள் கிடையாது; செயல் நிகழ்கின்றது; செய்வோன் இலன. இவ்வாறான விளக்கத்தைத் தான் பெளத்தம் கூறுகின்றது.
அன்று பெளத்தம் எழுப்பிய தத்துவ கேள்விகளும் பிரச்சனைகளும், இன்றளவும் அறிவியல் மற்றும் தத்துவ துறைகளில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடதக்கதாகும்.
ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் வாழ்ந்த பிரபல கிரேக்க தத்துவ ஞானியாகிய ஹெராகிளிட்டசு என்பவர் மாற்றம் குறித்த அதே அணுகுமுறையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.. இயக்கம் பற்றியும் மாற்றங்கள் பற்றியும் அதன் பல்வேறு பரிணாமங்கள் குறித்தும் முதன்முதலில் விளக்கி கூறியவர் புத்தர் பெருமானே யாவார். இந்திய இயங்கியலின் தந்தை புத்தர் என்றே சொல்லவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக